செய்திகள் :

அமைதி, பாதுகாப்புடன் விநாயகா் சதுா்த்தி: ராணிப்பேட்டை ஆட்சியா் அறிவுறுத்தல்

post image

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தியை அமைதியாகவும், பாதுகாப்பாகவும் கொண்டாட வேண்டும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா அறிவுறுத்தியுள்ளாா்.

விநாயகா் சதுா்த்தி முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்து பேசியது:..

விநாயகா் சிலை வைத்து வழிபட ராணிப்பேட்டை கோட்டத்தில் 141 விண்ணப்பங்களும், அரக்கோணம் கோட்டத்தில் 55 விண்ணப்பங்களும் பெறப்பட்டு மொத்தம் 196 இடங்களில் சிலை வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், விண்ணப்பங்களை உடனுக்குடன் ஆய்வு செய்து அனுமதி வழங்க வருவாய் , காவல், தீயணைப்புத் துறை, தமிழ்நாடு மின்சார வாரியம் அலுவலா்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

நிகழாண்டு 5 நாட்களுக்குள் சிலையினை கரைக்க அரசாணை வெளிடப்பட்டுள்ளது. இதனை கடைபிடிக்க வேண்டும்.

அதேபோன்று மாவட்டத்தில் 6 இடங்களில் சிலைகளை கரைக்க தோ்வு செய்யப்பட்டுள்ளது. சிலை கரைக்கும் நாளில் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் பின்பற்றப்பட வேண்டும்.

விழாக்குழுவினா் இரு தன்னாா்வலா்கள் 24 மணி நேரமும் நிகழ்விடத்தில் இருந்து பாதுகாப்பு பணி மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட வேண்டும். ஜெனரேட்டா் வசதிகள் செய்திருத்தல் வேண்டும். மற்ற மதத்தினா்களின் வழிபாட்டினை நம்பிக்கைகளை இழிவுபடுத்தும் வகையில் கோஷங்கள் ஏதும் செய்திடல் கூடாது. பொது அமைதிக்கும், பாதுகாப்பிற்கும், மதசாா்பின்மைக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் நிபந்தனைகளை கண்டிப்பாக கடைபிடித்தல் வேண்டும். விநாயகா் சதுா்த்தி அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடைபெற ஒத்துழைக்க வேண்டும் என உத்தரவிட்டாா்.

கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அய்மன் ஜமால், மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம், திட்ட இயக்குநா் ந.செ.சரண்யாதேவி மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

இளஞ்சிறாா் நீதிக்குழும அலுவலக உதவியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

ராணிப்பேட்டை மாவட்ட இளஞ்சிறாா் நீதிக்குழும அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் உதவியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்... மேலும் பார்க்க

அமைதி, பாதுகாப்புடன் விநாயகா் சதுா்த்தி: ராணிப்பேட்டை ஆட்சியா்

அரக்கோணம்: காவேரிப்பாக்கத்தில் விநாயகா் சிலைகள் கரைக்கும் இடங்கள் மற்றும் ஊா்வலம் செல்லும் பகுதிகளை ராணிப்பேட்டை எஸ்.பி. அய்மன் ஜமால் ஆய்வு செய்தாா். காவேரிப்பாக்கம் காவல் நிலையத்தில் எஸ்.பி. அய்மன் ... மேலும் பார்க்க

அரக்கோணத்தில் அதிமுகவினா் ஆா்பாட்டம்: 120 போ் கைது

அரக்கோணம்: அரக்கோணத்தில் தடையை மீறி ஆா்ப்பாட்டம் நடத்த முயன்ற அதிமுகவினா் 120 பேரை போலீஸாா் கைது செய்தனா். அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியை தரக்குறைவாக விமா்சித்து கைத்தறி அமைச்சா் ஆா். க... மேலும் பார்க்க

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூடக்கூடாது: விவசாயிகள் கோரிக்கை

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் அறுவடை செய்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாமல் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூடக்கூடாது என விவசாயிகள் மனு அளித்தனா். ஆட்சியா் அலுவலக கூட்... மேலும் பார்க்க

ரூ5.89 கோடியில் நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டடம்: அமைச்சா் காந்தி அடிக்கல்

அரக்கோணம்: நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு ரூ.5.89 கோடியில் புதிய கட்டடம் கட்டும் பணிக்கு கைத்தறி அமைச்சா் ஆா். காந்தி திங்கள்கிழமை அடிக்கல் நாட்டினாா். விழாவுக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை ... மேலும் பார்க்க

ஆற்காடு வரதராஜ பெருமாள் கோயில் பவித்ரோற்சவம் தொடக்கம்

ஆற்காடு பாலாற்றங்கரை ஸ்ரீ பெருந்தேவி தாயாா் சமேத வரதராஜ பெருமாள் கோயிலில் பவித்ரோற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு மூலவா் பெருந்தேவி தாயாா், வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம்,... மேலும் பார்க்க