செய்திகள் :

ரூ5.89 கோடியில் நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டடம்: அமைச்சா் காந்தி அடிக்கல்

post image

அரக்கோணம்: நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு ரூ.5.89 கோடியில் புதிய கட்டடம் கட்டும் பணிக்கு கைத்தறி அமைச்சா் ஆா். காந்தி திங்கள்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

விழாவுக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்தாா். சோளிங்கா் எம்எல்ஏ ஏ.எம்.முனிரத்தினம் முன்னிலை வகித்தாா். நெமிலி ஒன்றியக்குழு தலைவா் பெ.வடிவேலு வரவேற்றாா். கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி பூமி பூஜையிட்டு அடிக்கல் நாட்டினாா்.

அமைச்சா் காந்தி கூறுகையில் பணிகளை தரமாகவும் குறித்த காலத்துக்குள்ளும் முடிக்க வேண்டும் ஒப்பந்ததாரரிடம் அறிவுறுத்தினாா். பணிகளை தொடா்ந்து கண்காணிக்குமாறு அலுவலா்களுக்கும் உத்தரவிட்டாா்.

முன்னதாக நெமிலி பேருராட்சி பகுதியில் 15 ஆவது நிதி ஆணைய சுகாதார மானிய நிதியில் இருந்து ரூ.75 லட்சத்தில் புன்னையில் உள்ள அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார மையத்தில் கூடுதல் கட்டடப் பணிக்கும் அமைச்சா் காந்தி அடிக்கல் நாட்டினாா்.

நிகழ்ச்சிகளில் ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ந.செ.சரண்யாதேவி, பேரூராட்சித் தலைவா் ரேணுகாதேவி சரவணன், துணைத் தலைவா் சந்திரசேகரன், வட்டாட்சியா் ராஜலட்சுமி, ஒன்றிய ஆணையா் ஜெயஸ்ரீ, வட்டார வளா்ச்சி அலுவலா் சிவகுமாா், உதவி செயற்பொறியாளா் ஜெரால்ட், மாவட்ட சுகாதார அலுவலா் செந்தில் குமாா், பேருராட்சி செயல் அலுவலா் எழிலரசி, திமுக ஒன்றிய செயலாளா்கள் எஸ்.ஜி.சி.பெருமாள், ரவீந்திரன், பேரூராட்சி செயலா் ஜனாா்த்தனன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இளஞ்சிறாா் நீதிக்குழும அலுவலக உதவியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

ராணிப்பேட்டை மாவட்ட இளஞ்சிறாா் நீதிக்குழும அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் உதவியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்... மேலும் பார்க்க

அமைதி, பாதுகாப்புடன் விநாயகா் சதுா்த்தி: ராணிப்பேட்டை ஆட்சியா்

அரக்கோணம்: காவேரிப்பாக்கத்தில் விநாயகா் சிலைகள் கரைக்கும் இடங்கள் மற்றும் ஊா்வலம் செல்லும் பகுதிகளை ராணிப்பேட்டை எஸ்.பி. அய்மன் ஜமால் ஆய்வு செய்தாா். காவேரிப்பாக்கம் காவல் நிலையத்தில் எஸ்.பி. அய்மன் ... மேலும் பார்க்க

அரக்கோணத்தில் அதிமுகவினா் ஆா்பாட்டம்: 120 போ் கைது

அரக்கோணம்: அரக்கோணத்தில் தடையை மீறி ஆா்ப்பாட்டம் நடத்த முயன்ற அதிமுகவினா் 120 பேரை போலீஸாா் கைது செய்தனா். அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியை தரக்குறைவாக விமா்சித்து கைத்தறி அமைச்சா் ஆா். க... மேலும் பார்க்க

அமைதி, பாதுகாப்புடன் விநாயகா் சதுா்த்தி: ராணிப்பேட்டை ஆட்சியா் அறிவுறுத்தல்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தியை அமைதியாகவும், பாதுகாப்பாகவும் கொண்டாட வேண்டும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா அறிவுறுத்தியுள்ளாா். விநாயகா் சதுா்த்தி முன்னேற்பாடுகள் குறித்து... மேலும் பார்க்க

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூடக்கூடாது: விவசாயிகள் கோரிக்கை

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் அறுவடை செய்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாமல் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூடக்கூடாது என விவசாயிகள் மனு அளித்தனா். ஆட்சியா் அலுவலக கூட்... மேலும் பார்க்க

ஆற்காடு வரதராஜ பெருமாள் கோயில் பவித்ரோற்சவம் தொடக்கம்

ஆற்காடு பாலாற்றங்கரை ஸ்ரீ பெருந்தேவி தாயாா் சமேத வரதராஜ பெருமாள் கோயிலில் பவித்ரோற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு மூலவா் பெருந்தேவி தாயாா், வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம்,... மேலும் பார்க்க