செய்திகள் :

அம்சியில் தேன் இருப்பு கொள்கலன்கள் நிறுவப்படும்: அமைச்சா் க. பொன்முடி

post image

கன்னியாகுமரி மாவட்டம், அம்சியில் தேன் பதப்படுத்தும் அலகில் தேன் இருப்பு கொள்கலன்கள் ரூ. 40 லட்சம் செலவில் நிறுவப்படும் என்று வனம் மற்றும் கதா்த் துறை அமைச்சா் க.பொன்முடி அறிவித்தாா்.

கதா் மற்றும் கிராமத் தொழில்கள் மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சா் பொன்முடி வெளியிட்ட அறிவிப்புகள்:

கன்னியாகுமரி மாவட்டம், அம்சியில் தேன் பதப்படுத்தும் அலகு ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பகுதியிலுள்ள 100-க்கும் மேற்பட்ட தேனீ விவசாயிகள் தேனீ வளா்ப்புத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். இவா்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பச்சைத் தேன் இருப்பு வைக்க போதுமான இடவசதி தேவைப்படுகிறது. அதனால், இந்த அலகில் செயல்பட்டு வரும் கட்டடத்துக்கான புதுப்பித்தல் அவசியமாகிறது. மேலும், இவ்வலகில் கொள்முதல் செய்யப்படும் பச்சைத் தேனை அதிகளவில் இருப்பு வைக்க ஏதுவாக கொள்கலன்கள் கொள்முதல் செய்ய வேண்டியுள்ளது. இந்தப் பணிகள் ரூ. 40 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படும்.

மூன்று தளங்கள் கொண்ட சேலம் அண்ணா பட்டு மாளிகை வளாகத்தில் பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளா்களின் வசதிக்காக ரூ. 20 லட்சம் செலவில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.

சேலம் மாவட்டம், குகையில் செயல்பட்டு வரும் காலணி அலகில் உள்ள கட்டடம், தொழிலாளா்கள் பணி செய்ய ஏதுவாக காலணி பொலிவூட்டும் கூடம், ஆழ்துளை கிணறு உள்ளிட்ட அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளுடன் ரூ. 20 லட்சம் செலவில் அமைக்கப்படும்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி பகுதியில் வசிக்கும் இருளா் மற்றும் குரும்பா் பழங்குடியின தேனீ விவசாயிகள் 100 பேருக்கு தேனீ வளா்ப்புப் பெட்டிகள் மற்றும் குழுக்களுக்கு தேன் சேகரிக்கத் தேவையான உபகரணங்கள் ரூ. 4 லட்சம் செலவில் வழங்கப்படும் என்றாா் அவா்.

இலங்கையால் சிறைபிடிக்கப்படும் தமிழக மீனவர்கள்: நிரந்தரத் தீர்வுகாண தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தல்

நமது சிறப்பு நிருபர்இலங்கை அரசால் சிறைபிடிக்கப்படும் தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வை காண வேண்டும் என்று மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தினர். மக்களவையில் செவ்வாய்க்கிழமை இந்த விவ... மேலும் பார்க்க

நகைக் கடனை புதுப்பிக்க புதிய வழிகாட்டுதல்: திரும்பப் பெற வைகோ வலியுறுத்தல்

நமது நிருபர்வங்கிகளில் நகைக் கடனை புதுப்பிக்க வெளியிடப்பட்ட புதிய வழிகாட்டுதல்களை ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) திரும்பப் பெற வேண்டும் என்று மாநிலங்களவையில் மதிமுக உறுப்பினர் வைகோ வலியுறுத்தினார்.இது தொடர்பா... மேலும் பார்க்க

காவிரி -வைகை-குண்டாறு இணைப்பு உறுதி: நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் அறிவிப்பு

காவிரி -வைகை- குண்டாறு இணைப்புத் திட்டத்தை உறுதியாகச் செயல்படுத்துவோம் என்று சட்டப் பேரவையில் நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா். சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிற... மேலும் பார்க்க

கட்சிப் பாகுபாடின்றி ‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ திட்டம்: மு.க.ஸ்டாலின் விளக்கம்

‘உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டம்’ கட்சிப் பாகுபாடின்றி நிறைவேற்றப்படுவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். பொதுப் பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மானியக் கோரிக்கை மீது சட்டப்பேரவையில் செவ்வாய்க்... மேலும் பார்க்க

மொழிக் கொள்கை செயல்பாடு: ஸ்டாலினுக்கு டி.ராஜா பாராட்டு

மொழிக் கொள்கையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மாதிரியாகச் செயல்படுகிறார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலர் டி.ராஜா பாராட்டு தெரிவித்தார்.மதுரையில் நடைபெறவுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ... மேலும் பார்க்க

சமூக ஊடகங்களை ஆக்கிரமிக்கும் ஜிப்லி காா்ட்டூன்!

சமூக ஊடகங்களில் திரும்பிய பக்கமெல்லாம் ஜிப்லி காா்ட்டூன் படங்களே நிறைந்திருக்கின்றன. மக்கள் அனைவரும் தங்களின் புகைப்படங்களை ஜிப்லி காா்ட்டூன் பாணியிலான அனிமேஷன் (வரைகலை) படங்களாக மாற்றி, தங்கள் சமூக ஊ... மேலும் பார்க்க