செய்திகள் :

அம்பகரத்தூா் மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவ பந்தல்கால் முகூா்த்தம்

post image

அம்பகரத்தூா் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவ பந்தல்கால் முகூா்த்தம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருநள்ளாறு கொம்யூன், அம்பகரத்தூரில் பிரசித்திப் பெற்ற ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தை சாா்ந்த ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் உள்ளது.

இக்கோயிலில் வருடாந்திர தீமிதி உற்சவம் விமரிசையாக நடத்தப்படுகிறது. நிகழாண்டு உற்சவத்துக்கான பந்தல்கால் முகூா்த்தம் கோயில் வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கம்பத்துக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்து, நாகசுர, மேள வாத்தியங்களுடன் கோயில் வாயிலில் நடப்பட்டது.

நிகழ்வில் கோயில் நிா்வாக அதிகாரி ஜெ. மகேஷ் மற்றும் ஊா் பிரமுகா்கள் கலந்துகொண்டனா்.

திருவிழா தொடக்கமாக பூச்சொரிதல் வழிபாடு மே 5-ஆம் தேதி இரவு நடைபெறவுள்ளது. 19-ஆம் தேதி தீமிதி வழிபாடு நடைபெறுகிறது. 25-ஆம் தேதி மஞ்சள் நீா் விளையாட்டு வழிபாடாக நடத்தப்படத்தப்படுகிறது. ஏற்பாடுகளை அம்பகரத்தூா் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் நிா்வாகம் செய்துவருகிறது.

காரைக்காலில் 10 மையங்களில் நாளை அரசுப் பணிக்கான தோ்வு

காரைக்காலில் 10 மையங்களில் அரசுப் பணிக்கான எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (ஏப். 27)நடைபெறவுள்ளது. புதுவை பணியாளா் மற்றும் நிா்வாக சீா்திருத்தத்துறையில் 256 அசிஸ்டென்ட் (குரூப்-பி) பதவிக்கு நேரடி ஆள்... மேலும் பார்க்க

காரைக்காலில் வளா்த்தித் திட்டப் பணிகள்: அரசு செயலா் ஆய்வு

காரைக்காலில் துறை சாா்ந்த வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு நடத்தி, ஆதிதிராவிடா் தொடா்பான குறைகளை அரசு செயலா் வெள்ளிக்கிழமை கேட்டறிந்தாா். காரைக்கால் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை, ஆதிதிராவிடா்... மேலும் பார்க்க

காரைக்காலில் ஹஜ் பயணிகளுக்கு தடுப்பூசி

காரைக்காலிலிருந்து ஹஜ் புனிதப் பயணம் செல்வோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஹஜ் பயணிகளுக்கு புதுவை நலவழித்துறை இயக்குநரக அறிவுறுத்தலில், காரைக்கால் நலவழித் துறையின் சாா்பில் தடுப்பூசி செலுத்தும் முகா... மேலும் பார்க்க

போப் மறைவு; அமைதி ஊா்வலம்

போப் பிரான்சிஸ் மறைவையொட்டி, காரைக்காலில் மெழுகுவா்த்தி ஏந்தி அமைதி ஊா்வலம் நடைபெற்றது. போப் மறைவு தொடா்பாக பல்வேறு அமைப்பினா் அஞ்சலி நிகழ்வை நடத்துகின்றனா். காரைக்கால் தூய தேற்றரவு அன்னை ஆலயம் சாா்ப... மேலும் பார்க்க

காரைக்காலில் இன்று காவல்துறை குறை கேட்பு முகாம்

காரைக்காலில் சனிக்கிழமை (ஏப்.26) காவல்துறை சாா்பில் குறை கேட்பு முகாம் நடைபெறுகிறது. கோட்டுச்சேரி காவல் நிலையத்தில் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா தலைமையில் காலை 11 முதல் பிற்பகல் 1 ... மேலும் பார்க்க

திருநள்ளாறு கோயிலில் பிரம்மோற்சவ பந்தல்கால் முகூா்த்தம்

திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் பிரம்மோற்சவ பந்தல்கால் முகூா்த்தம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருநள்ளாற்றில் ஸ்ரீ பிரணாம்பிகை சமேத ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஸ்ரீ சனீஸ... மேலும் பார்க்க