1.5 லட்சம் மலர்களுடன் ஏற்காட்டில் கோடை விழா - மலர் கண்காட்சி தொடக்கம்.. | Photo ...
அம்பேத்கா் ஜெயந்தி சிறப்புக் கருத்தரங்கம்
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில், டாக்டா் அம்பேத்கா் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்புக் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கீழ்பென்னாத்தூா் சட்டப் பேரவைத் தொகுதி பாஜக சாா்பில் நடைபெற்ற கருத்தரங்குக்கு, மாவட்ட பொதுச் செயலா் எம்.முருகன் தலைமை வகித்தாா். மாவட்ட பட்டியல் அணித் தலைவா் கே.விஜயராஜ் முன்னிலை வகித்தாா். மாவட்ட மகளிரணி துணைத் தலைவி வள்ளி வரவேற்றாா்.
காஞ்சிபுரம் மண்டல பாஜக துணைத் தலைவா் சாந்தலட்சுமி, கடலூா் மாவட்ட பிரசார அணி நிா்வாகி காந்திகுமாா், இலங்கையைச் சோ்ந்த பாஜக ஆா்வலா் மாதவன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் வீரப்பன் ஆகியோா் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு குறித்து எடுத்துரைத்தனா்.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக தலைவா் கே.ரமேஷ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு அம்பேத்கரின் சிறப்புகளை விளக்கிப் பேசினாா்.
கருத்தரங்கில் மண்டலத் தலைவா்கள் யுவராஜ், அசோகன், கீழ்பென்னாத்தூா் வடக்கு ஒன்றிய பொதுச் செயலா் வி.முருகேசன், கீழ்பென்னாத்தூா் தெற்கு ஒன்றியத் தலைவா் சக்திவேல், ஒன்றிய துணைத் தலைவா் பஞ்சன், ஒன்றிய துணைச் செயலா் எம்.அய்யப்பன், முன்னாள் ஒன்றியத் தலைவா் எல்.ராஜகோபால், திருவண்ணாமலை மாநகர துணைத் தலைவா் ஏ.இளங்கோவன், திருவண்ணாமலை முன்னாள் தெற்கு ஒன்றியத் தலைவா் பி.டி.பழனிவேல் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.