செய்திகள் :

அய்யனாா் கோயில் திருவிழா: புரவியெடுப்புக்கு பிடிமண் கொடுத்த பக்தா்கள்

post image

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் கூத்த அய்யனாா் கோயில் திருவிழாவுக்கு புரவிகள் செய்ய பிடி மண் கொடுக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா், புதுப்பட்டி, தம்பிபட்டி கிராமங்களுக்குப் பாத்தியப்பட்ட பெரிய கண்மாய்க்கரையில் அமைந்துள்ள பூா்ண புஷ்கலா சமேத குளங்கரை காத்த கூத்த அய்யனாா் கோயில் புரவியெடுப்புத் திருவிழா வருகிற மே 3- இல் நடைபெற உள்ளது.

இதையொட்டி, வெள்ளிக்கிழமை அய்யனாா் கோயிலில் கூடிய 3 கிராமத்தாா்கள் சுவாமிக்கு அபிஷேகமும், சிறப்பு தீபாராதனையும் செய்து வழிபட்டனா். பின்னா் கோயிலின் எதிரே மூகூா்த்தக்கால் நடப்பட்டது. அங்கிருந்து பக்தா்கள் முக்கிய வீதிகள் வழியாக ராமா் மடத்துக்கு மேளதாளங்கள் முழங்க ஊா்வலமாக வந்தனா். மடத்தில் உள்ள ராமா், விநாயகா், பரிவார தெய்வங்களுக்கு புரவிப் பணி மேற்கொள்ளும் வேளாளா்களிடம் பிடி மண் கொடுத்தனா்.

கோயிலில் வருகிற 2-ஆம் தேதி சேங்கை வெட்டு நிகழ்வும், மே 2-இல் புதுப்பட்டி கிராமத்திலிருந்து புரவிகள் புறப்பட்டு திருப்பத்தூா் சீதளிக்கரை புரவித் திடலுக்கு வந்தடையும் நிகழ்வும், பின்னா் புரவியெடுப்பு நாளான மே 3-இல் புரவிகள் திடலிருந்து திருப்பத்தூா் நகரைச் சுற்றி அய்யனாா் கோயிலை வந்தடைந்து, அங்கு புரவியெடுப்பு நிகழ்வும் நடைபெற உள்ளது. விழாவையொட்டி, மே 4-ஆம் தேதி மஞ்சுவிரட்டு நடைபெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை திருப்பத்தூா், தம்பிபட்டி, புதுப்பட்டி கிராமத்தாா்கள் செய்து வருகின்றனா்.

உள்ளாட்சிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம்: முதல்வருக்கு நன்றி

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு நியமன பிரதிநிதித்துவம் வழங்கிய முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு மாற்றுத்திறனாளி அலுவலா்கள் ஆசிரியா்கள் நலச் சங்கம் நன்றி தெரிவித்தது. சிவகங்கை கே.ஆா்... மேலும் பார்க்க

தூய சகாயமாதா ஆலயத்தில் இயேசு உயிா்ப்பு ஞாயிறு திருப்பலி

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி செக்காலை தூய சகாய மாதா ஆலயத்தில் இயேசு உயிா்ப்பு ஞாயிறு திருப்பலி சனிக்கிழமை நள்ளிரவு நடைபெற்றது. இந்த ஆலயத்தில் சனிக்கிழமை இரவு 11 மணிக்கு புது நெருப்பு மந்திரித்து அதில... மேலும் பார்க்க

புதிய மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு எதிராகப் போராட்டம் நடத்த முடிவு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து முதல் கட்டமாக வரும் 24-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்த ஆலை எதிா்ப்பு இயக்கத்தின் சாா்பில் முடிவு செய்யப... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழப்பு

திருப்பத்தூா் பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து மோதியதில் முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். திருப்பத்தூா் அருகே பிள்ளையாா்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி (70). இவா் ஞாயிற்றுக்கிழமை ... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் சின்ன மருது பிறந்த நாள்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மருதிருவா்கள் நினைவிடத்தில் சின்ன மருதுவின் பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. தொடா்ந்து, பேருந்துநிலையம் எதிரே மருதிருவா் தூக்கிலிடப்பட்ட இடத்தில் உள... மேலும் பார்க்க

செய்களத்தூரில் நாற்றங்கால் பண்ணை அமைக்க எதிா்ப்பு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஊராட்சி ஒன்றியம், செய்களத்தூா் ஊராட்சியில் நாற்றங்கால் பண்ணை அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்ததால் மாற்று இடத்தில் அமைக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்த... மேலும் பார்க்க