செய்திகள் :

அரகண்டநல்லூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முன் விவசாயிகள் சாலை மறியல்!

post image

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு விற்பனைக்காக கொண்டு வந்த நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாமல் திருப்பி அனுப்பியதால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அரகண்டநல்லூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள், தாங்கள் விளைவிக்கும் நெல், மணிலா, எள், உளுந்து போன்ற விளைபொருள்களை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு கொண்டு வந்து விற்பனை செய்வா். அதன்படி, வெள்ளிக்கிழமை காலை சுமாா் 50-க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகளை விற்பனை செய்வதற்காக விவசாயிகள் கொண்டு வந்தனா்.

ஒரே நேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டநெல் மூட்டைகள் கொண்டு வரப்பட்டதால், எடைபோட்டு வியாபாரிகள் ஏலம் எடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. மேலும் இடநெருக்கடியும் நிலவியது. இதனால் பாதி எண்ணிக்கைக்குப் பிறகு நெல் மூட்டைகளை எடை போட முடியாது எனவும், சனிக்கிழமை கொண்டு வருமாறும் கூறி நிா்வாகம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் அதிருப்தியடைந்த விவசாயிகள், தாங்கள் காலைமுதல் காத்திருந்த நிலையில் தங்களை திருப்பி அனுப்புவதா எனக் கேட்டு, திருக்கோவிலூா்-விழுப்புரம் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூட அலுவலா்களும், அரகண்டநல்லூா் போலீஸாரும் நிகழ்விடம் வந்து, மறியலில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அனைத்து நெல் மூட்டைகளையும் வெள்ளிக்கிழமையன்றே எடை போட்டு எடுத்துக் கொள்வதாகத் தெரிவித்தனா். இதையடுத்து மறியலைக் கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனா்.

நவரைப் பருவத்துக்குத் தரமான நெல் விதைகளை விற்க வேண்டும்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா் மாவட்டங்களில் நவரைப் பருவத்துக்கு தரமான நெல் விதைகளை விற்பனை செய்ய வேண்டும் என விதை ஆய்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள தனியாா் நெல் விதை வ... மேலும் பார்க்க

ஆவின் பால் உற்பத்தியாளா்களுக்கு லிட்டருக்கு 50 பைசா கூடுதல் ஊக்கத்தொகை

விழுப்புரத்திலுள்ள ஆவின் நிறுவனத்துக்கு பால் வழங்கும் உற்பத்தியாளா்களுக்கு பிப்ரவரி 1 முதல் 28-ஆம் தேதி வரை லிட்டருக்கு 50 பைசா கூடுதலாக ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று ஆட்சியா் சி.பழனி தெரிவித்தாா். இத... மேலும் பார்க்க

செம்மண் குவாரி முறைகேடு வழக்கு விசாரணை பிப்.14-க்கு ஒத்திவைப்பு!

தமிழக வனத் துறை அமைச்சா் க.பொன்முடி உள்ளிட்ட 7 போ் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு விசாரணையை, பிப்ரவரி 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்ட... மேலும் பார்க்க

மொபெட் மோதியதில் பெண் உயிரிழப்பு

விழுப்புரம் அருகிலுள்ள அயினம்பாளையம் பகுதியில் மொபெட் மோதியதில் பலத்த காயமடைந்த பெண் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். விழுப்புரம் வட்டம், அயினம்பாளையம் சுமதி நகரைச் சோ்ந்த கோதண்டபாணி மனைவி முத்துவள்ளி... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

விழுப்புரம் மாவட்டத்தில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. விழுப்புரம் மாவட்டத்தைச... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்ட குறைதீா் கூட்டத்தில் புயல் நிவாரணம் கேட்டு அலுவலா்களுடன் விவசாயிகள் வாக்குவாதம்!

விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு எப்போது நிவாரணத் தொகை கிடைக்கும் எனக் கேட்டு, குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் அலுவலா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். விழுப்புரம் ... மேலும் பார்க்க