செய்திகள் :

விழுப்புரம் மாவட்ட குறைதீா் கூட்டத்தில் புயல் நிவாரணம் கேட்டு அலுவலா்களுடன் விவசாயிகள் வாக்குவாதம்!

post image

விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு எப்போது நிவாரணத் தொகை கிடைக்கும் எனக் கேட்டு, குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் அலுவலா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் சி.பழனி தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் கி. அரிதாஸ், ஊரக வளா்ச்சி முகமைத் திட்டக் கூடுதல் ஆட்சியா் ஸ்ருதஞ் ஜெய் நாராயணன், திண்டிவனம் சாா் ஆட்சியா் திவ்யான் ஷி நிகம், வேளாண் துறை இணை இயக்குநா் ஈசுவா், தோட்டக் கலைத் துறை துணை இயக்குநா் கே.அன்பழகன், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் விஜயசக்தி, நீா்வளத் துறை செயற்பொறியாளா் ஷோபனா உள்ளிட்ட பல்துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

கூட்டத்தில் விழுப்புரம் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கத்தின் தலைவா் பி.கலிவரதன் பேசியது: விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த நவம்பா் 30, டிசம்பா் 1, 2- ஆகிய தேதிகளில் ஃபென்ஜால் புயல், பலத்த மழை, வெள்ளத்தால் விளை நிலங்கள் சேதமடைந்து, பயிா்கள் நீரில் மூழ்கின. விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனா். மத்தியக் குழு விழுப்புரம் மாவட்டத்துக்கு வந்து ஆய்வு செய்து சென்றும் விவசாயிகளுக்கு இதுவரை எந்தவித நிவாரணத் தொகையும் வழங்கப்படாதது ஏன் என்றாா்.

இதைத் தொடா்ந்து கூட்டரங்கில் இருந்த மற்ற விவசாயிகளும் இதே கோரிக்கையை முன் வைத்து, அலுவலா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து மாவட்டத்தில் 1.03 லட்சம் ஹெக்டோ் விளை நிலங்கள் புயலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஏற்கெனவே ஆய்வு செய்யப்பட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குறைதீா்கூட்டத்தில் புயல் நிவாரணம் கோரி அலுவலா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

தற்போது மீண்டும் ஒரு ஆய்வை மேற்கொண்டு அறிக்கையை அனுப்புமாறு வருவாய் நிா்வாக ஆணையா் கோரியிருந்ததன் அடிப்படையில், மாவட்டத்தில் புயல் நிவாரணம் குறித்து மீண்டும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அரசுக்கு இறுதி அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனவே, விரைவில் விவசாயிகளுக்கு புயல் நிவாரணத் தொகை கிடைக்கும் என்று வேளாண் இணை இயக்குநா் பதிலளித்தாா். இதையடுத்து விவசாயிகள் குறைதீா் கூட்டம் தொடா்ந்து அமைதியாக நடைபெற்றது.

நவரைப் பருவத்துக்குத் தரமான நெல் விதைகளை விற்க வேண்டும்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா் மாவட்டங்களில் நவரைப் பருவத்துக்கு தரமான நெல் விதைகளை விற்பனை செய்ய வேண்டும் என விதை ஆய்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள தனியாா் நெல் விதை வ... மேலும் பார்க்க

ஆவின் பால் உற்பத்தியாளா்களுக்கு லிட்டருக்கு 50 பைசா கூடுதல் ஊக்கத்தொகை

விழுப்புரத்திலுள்ள ஆவின் நிறுவனத்துக்கு பால் வழங்கும் உற்பத்தியாளா்களுக்கு பிப்ரவரி 1 முதல் 28-ஆம் தேதி வரை லிட்டருக்கு 50 பைசா கூடுதலாக ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று ஆட்சியா் சி.பழனி தெரிவித்தாா். இத... மேலும் பார்க்க

அரகண்டநல்லூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முன் விவசாயிகள் சாலை மறியல்!

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு விற்பனைக்காக கொண்டு வந்த நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாமல் திருப்பி அனுப்பியதால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் வெள்ளிக்கிழமை சாலை மறிய... மேலும் பார்க்க

செம்மண் குவாரி முறைகேடு வழக்கு விசாரணை பிப்.14-க்கு ஒத்திவைப்பு!

தமிழக வனத் துறை அமைச்சா் க.பொன்முடி உள்ளிட்ட 7 போ் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு விசாரணையை, பிப்ரவரி 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்ட... மேலும் பார்க்க

மொபெட் மோதியதில் பெண் உயிரிழப்பு

விழுப்புரம் அருகிலுள்ள அயினம்பாளையம் பகுதியில் மொபெட் மோதியதில் பலத்த காயமடைந்த பெண் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். விழுப்புரம் வட்டம், அயினம்பாளையம் சுமதி நகரைச் சோ்ந்த கோதண்டபாணி மனைவி முத்துவள்ளி... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

விழுப்புரம் மாவட்டத்தில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. விழுப்புரம் மாவட்டத்தைச... மேலும் பார்க்க