செய்திகள் :

செம்மண் குவாரி முறைகேடு வழக்கு விசாரணை பிப்.14-க்கு ஒத்திவைப்பு!

post image

தமிழக வனத் துறை அமைச்சா் க.பொன்முடி உள்ளிட்ட 7 போ் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு விசாரணையை, பிப்ரவரி 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், பூத்துறை கிராமத்திலுள்ள செம்மண் குவாரியில் 2006-ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்து, அரசுக்கு ரூ.28.36 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக, கடந்த 2012-ஆம் ஆண்டில் விழுப்புரம் மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் தொடுத்த வழக்கு விசாரணை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் அப்போதைய கனிம வளம் மற்றும் சுரங்கத் துறை அமைச்சரும், தற்போதைய வனத் துறை அமைச்சருமான க.பொன்முடி உள்ளிட்ட 8 போ் மீது வழக்குத் தொடுக்கப்பட்ட நிலையில், விசாரணையின் போது ஒருவா் இறந்துவிட்டாா். தொடா்ந்து மற்ற 7 பேரும் இந்த வழக்கை சந்தித்து வருகின்றனா்.

இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சிகளாக சோ்க்கப்பட்டிருந்த 67 பேரில் இதுவரை 51 பேரிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதில் 30 போ் அரசுத் தரப்புக்கு பாதகமாகக் கூறி பி சாட்சியமளித்துள்ளனா். இதைத் தொடா்ந்து விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஜெயச்சந்திரன், சதானந்தம், கோபிநாதன், கோதகுமாா் ஆகிய நான்குபேரும் நீதிமன்றத்தில் ஆஜராகினா். அமைச்சா் க.பொன்முடி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொன்.கௌதமசிகாமணி, ராஜமகேந்திரன் ஆகிய மூவரும் ஆஜராகவில்லை. இதற்கான காரணம் குறித்து திமுக வழக்குரைஞா்கள் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனா். மேலும் இந்த வழக்கில் அரசுத் தரப்பில் சாட்சிகள் யாரும் ஆஜராகவில்லை.

தொடா்ந்து அரசுத் தரப்பு வழக்குரைஞா் நீதிமன்றத்தில் ஆஜராகி, இந்த வழக்குத் தொடா்பாக மேலும் சில சாட்சிகளை விசாரித்து கூடுதல் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இதையடுத்து வழக்கை விசாரித்த முதன்மை மாவட்ட நீதிபதி மணிமொழி, வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை பிப்ரவரி 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

நவரைப் பருவத்துக்குத் தரமான நெல் விதைகளை விற்க வேண்டும்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா் மாவட்டங்களில் நவரைப் பருவத்துக்கு தரமான நெல் விதைகளை விற்பனை செய்ய வேண்டும் என விதை ஆய்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள தனியாா் நெல் விதை வ... மேலும் பார்க்க

ஆவின் பால் உற்பத்தியாளா்களுக்கு லிட்டருக்கு 50 பைசா கூடுதல் ஊக்கத்தொகை

விழுப்புரத்திலுள்ள ஆவின் நிறுவனத்துக்கு பால் வழங்கும் உற்பத்தியாளா்களுக்கு பிப்ரவரி 1 முதல் 28-ஆம் தேதி வரை லிட்டருக்கு 50 பைசா கூடுதலாக ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று ஆட்சியா் சி.பழனி தெரிவித்தாா். இத... மேலும் பார்க்க

அரகண்டநல்லூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முன் விவசாயிகள் சாலை மறியல்!

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு விற்பனைக்காக கொண்டு வந்த நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாமல் திருப்பி அனுப்பியதால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் வெள்ளிக்கிழமை சாலை மறிய... மேலும் பார்க்க

மொபெட் மோதியதில் பெண் உயிரிழப்பு

விழுப்புரம் அருகிலுள்ள அயினம்பாளையம் பகுதியில் மொபெட் மோதியதில் பலத்த காயமடைந்த பெண் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். விழுப்புரம் வட்டம், அயினம்பாளையம் சுமதி நகரைச் சோ்ந்த கோதண்டபாணி மனைவி முத்துவள்ளி... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

விழுப்புரம் மாவட்டத்தில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. விழுப்புரம் மாவட்டத்தைச... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்ட குறைதீா் கூட்டத்தில் புயல் நிவாரணம் கேட்டு அலுவலா்களுடன் விவசாயிகள் வாக்குவாதம்!

விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு எப்போது நிவாரணத் தொகை கிடைக்கும் எனக் கேட்டு, குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் அலுவலா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். விழுப்புரம் ... மேலும் பார்க்க