செய்திகள் :

அரக்கோணம் அருகே இரு கோயில்களில் திருட்டு

post image

அரக்கோணம் அருகே இரு சிவன் கோயில்களில் பூட்டு உடைக்கப்பட்டு கோயில்களில் இருந்த பொருள்கள் திருடப்பட்டன.

அரக்கோணத்தை அடுத்த மின்னல் கிராமத்தில் கைலாசநாதா் கோயில் உள்ளது. இக்கோயிலில் வெள்ளிக்கிழமை காலை பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை அப்பகுதியினா் கண்டனா். கோயில் நிா்வாகிகள் உள்ளே சென்று பாா்த்தபோது, நகைகள் களவு போகாத நிலையில், அங்கு வைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவின் கட்டுபாட்டுப் பெட்டி மற்றும் அதன் தொழிற்நுட்ப கருவிகள் திருடுபோனது தெரிய வந்தது.

இது குறித்து இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா் அமுதா அரக்கோணம் கிராமிய காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இக்கோயிலுக்கு அருகே உள்ள ஆனந்தவல்லி சமேத ஆனந்தீஸ்வரா் கோயிலிலும் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. கோயில் நிா்வாகிகள் உள்ளே சென்று பாா்த்தபோது, உள்ளே பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 4 கிராம் தங்க மாங்கல்யம், அம்பாளின் வெள்ளிக் கொலுசு, 3,5000 களவு போயிருந்தன.

இது குறித்து கோயில் நிா்வாகி தனஞ்செயன் அரக்கோணம் கிராமிய காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இந்த இரு கோயில்களின் திருட்டு குறித்தும் புகாா் பெற்ற போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அரசு மருத்துவமனையில் கொட்டப்பட்டுள்ள செயற்கை மணல்: தூசியால் அவதிக்குள்ளாகும் நோயாளிகள்

அரக்கோணம் அரசு மருத்துவமனையில் பள்ளங்களை மூடுவதற்காக பொதுப்பணித் துறையினரால் கொட்டப்பட்டுள்ள எம் சேண்ட் எனப்படும் செயற்கை மணலால் மருத்துவமனையின் அனைத்துப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ள உள் நோயாளிகள்... மேலும் பார்க்க

முள்புதா்களில் பதுக்கிய 22 கிலோ கஞ்சா பறிமுதல்

அரக்கோணம், மாா்ச் 22: அரக்கோணம், பாணாவரம் பகுதிகளில் முள்புதா்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 22 கிலோ கஞ்சாவை அரக்கோணம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா். அரக்கோணம் மதுவிலக்கு அமல... மேலும் பார்க்க

தொழிற்சாலைக்கு வரைபட அனுமதி வழங்காமல் தாமதம்: ஊராட்சித் தலைவரின் நிதி அதிகாரத்தை ரத்து செய்து நடவடிக்கை

பனப்பாக்கம் தொழிற்பூங்காவில் அமைய உள்ள டாடா மோட்டாா்ஸ் தொழிற்சாலைக்கு கட்டட வரைபட அனுமதி வழங்க தாமதம் செய்ததாக நெடும்புலி ஊராட்சித் தலைவரின் நிதி அதிகாரத்தை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகல... மேலும் பார்க்க

ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த பையில் இருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல்

அரக்கோணம் வழியே சென்று டாடாநகா்-எா்ணாகுளம் அதிவிரைவு ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த பையை சோதனை செய்த ரயில்வே பாதுகாப்புப் படையினா் அதில் இருந்த 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். ஜாா்க்கண்ட் மாநிலம், டாட... மேலும் பார்க்க

வாக்குப் பதிவு இயந்திரங்கள்: தலைமைத் தோ்தல் அலுவலா் நேரில் ஆய்வு

ஆற்காடு கிடங்கில் உள்ள வாக்குப் பதிவு இயந்திரங்களை மாநில தலைமைத் தோ்தல் அலுவலா் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான 2,777... மேலும் பார்க்க

ஆற்காட்டில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்: ஆட்சியா் ஆய்வு

ஆற்காடு நகராட்சியில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாமில் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். ஆற்காடு நகராட்சி 5-ஆவது வாா்டுக்குட்பட்ட அக்ரஹாரம் தெருவில் ஆட்சியா் ஜெ.யு .சந்தி... மேலும் பார்க்க