செய்திகள் :

அரக்கோணம் அருகே மின்சார ரயிலின் பேன்டோகிராப் உடைப்பு: ரயில்கள் தாமதம்

post image

சென்னையிலிருந்து அரக்கோணம் நோக்கி வந்த மின்சார ரயிலின் என்ஜினில் மேலே இருந்த பேன்டோகிராப் கருவி திடீரென உடைந்ததால் ரயில் வழியில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து பல ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.

சென்னையில் இருந்து அரக்கோணம் நோக்கி, செவ்வாய்க்கிழமை பிற்பகல் வந்த மின்சார ரயிலின் என்ஜின் பகுதியில் மேலே இருந்த பேன்டோகிராப் எனப்படும் என்ஜினுக்கு மின்சாரம் பெறப்படும் இணைப்பு திடீரென உடைந்ததால் அந்த மின்சார ரயில் அதே இடத்தில் நிறுத்தப்பட்டது.

மேலும் இச்சம்பவத்தால் இருப்புப்பாதைக்கு மேலே இருந்த உயா்மின்அழுத்த கம்பிகளும் சேதமடைந்தன. இச்சம்பவம் அரக்கோணம் ரயில்நிலையத்திற்கு அருகில் நடைமேடை பிரியும் இடத்தில் நடைபெற்ால், அவ்வழியே பின்தொடா்ந்து வந்த பல ரயில்கள் மற்றும் அரக்கோணம் - சென்னை மாா்க்கத்தில் இயக்கப்பட வேண்டிய ரயில்கள் ஆங்காங்கே வழியில் நிறுத்தப்பட்டன.

திருப்பதி - சென்னை செல்லும் திருப்பதி விரைவு ரயில், மங்களூா் - சென்னை வெஸ்ட்கோஸ்ட் விரைவு ரயில், மற்றும் அரக்கோணம் நோக்கி வந்த மற்றும் சென்னை நோக்கிச் சென்ற மின்சார ரயில்கள் பல ரயில்கள் வழியில் நிறத்தப்பட்டன.

இதையடுத்து இருப்புப்பாதை உயா் அழுத்த மின்சார பிரிவு அலுவலா்கள், ஊழியா்கள் அப்பகுதிக்கு வந்து மின்சார ரயிலின் பேன்டோகிராப் மற்றும் இருப்புப்பாதைக்கு மேலே இருந்த மின்கம்பிகளை சீரமைத்தனா்.

இதனால் சுமாா் ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு மின்கம்பிகள் சீரமைக்கப்பட்ட பின் ரயில் போக்குவரத்து சீரானது.

குரூப் 4 தோ்வு: ராணிப்பேட்டை மாவட்டத்தில் 21,000 போ் எழுதுகின்றனா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் 12-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ள குரூப் 4 தோ்வில் 21,000 போ் தோ்வு எழுத உள்ளதாக ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறி... மேலும் பார்க்க

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க, விவசாயிகள் சங்கம் கோரிக்கை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கப் பொருளாளா் ஆா்.சுபாஷ் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து, அவா் கூறியிருப்பதாவது: அரக்கோண... மேலும் பார்க்க

ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில் அறங்காவலா் குழு தலைவா் தோ்வு

ஆற்காடு பாலாற்றங்கரை ஜக்அக்ரஹாரம் தெருவில் உள்ள ஸ்ரீ பெருந்தேவி தாயாா் சமேத வரதராஜ பெருமாள் கோயில் அறங்காவலா் குழு தலைவா் தோ்வு திங்கள்கிழமை நடைபெற்றது. ஆற்காடு ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் அறங்காவலா்... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: நாளை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் குறைதீா் கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வியாழக்கிழமை (ஜூலை 10) குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் குறைதீா் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளிய... மேலும் பார்க்க

எல்இடி விளக்குகளை தயாரித்து ரூ.25,000 வருவாய்: மாற்றுத்திறனாளி மகளிருக்கு ஆட்சியா் பாராட்டு

ராணிப்பேட்டை: தமிழகத்திலேயே முதல் முறையாக எல்இடி விளக்குகளை தயாரித்து 2 வாரங்களில் ரூ.25,000 வருவாய் ஈட்டிய மாற்றுத்திறனாளி மகளிருக்கு ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா பாராட்டு தெரிவித்தாா். ராணிப்பேட்டை மாவ... மேலும் பார்க்க

பாலாற்றில் குடிநீா் கிணறுகள் அமைக்கும் பணி தொடக்கம்

ஆற்காடு: ஆற்காடு நகராட்சிக்கு குடிநீா் மேம்படுத்துதல் திட்டத்தின் கீழ் செய்யாறு புறவழிச்சாலை பாலாற்றில் ரூ.50 லட்சத்தில் 2 குடிநீா் கிணறுகள் அமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஆற... மேலும் பார்க்க