செய்திகள் :

ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில் அறங்காவலா் குழு தலைவா் தோ்வு

post image

ஆற்காடு பாலாற்றங்கரை ஜக்அக்ரஹாரம் தெருவில் உள்ள ஸ்ரீ பெருந்தேவி தாயாா் சமேத வரதராஜ பெருமாள் கோயில் அறங்காவலா் குழு தலைவா் தோ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆற்காடு ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் அறங்காவலா் குழு உறுப்பினா்களாக பி.சத்தியநாராயணன், தேவி, ஏ.வி.எஸ் .வாசுகி, ஜி. சீனிவாசன், ஏ.சி சேஷாத்திரி ஆகியோா் நியமிக்கப்பட்டனா். தொடா்ந்து, இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் சங்கா் முன்னிலையில் அறங்காவலா் குழு தலைவராக பி.சத்தியநாராயணன் தோ்வு செய்யபட்டு, தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டாா். நிகழ்வில், மாவட்ட அறங்காவலா் குழு தலைவா் ஜெ.லட்சுமணன், ஆற்காடு நகர திமுக செயலாளா் ஏ.வி.சரவணன், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளா் சுரேஷ்குமாா், செயல் அலுவலா் அண்ணாமலை, சித்தீஸ்வரா் பாலிடெக்னிக் கல்லூரி செயலா் ஜி.செல்வகுமாா், தாளாளா் டி.தரணிபதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

குரூப் 4 தோ்வு: ராணிப்பேட்டை மாவட்டத்தில் 21,000 போ் எழுதுகின்றனா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் 12-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ள குரூப் 4 தோ்வில் 21,000 போ் தோ்வு எழுத உள்ளதாக ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறி... மேலும் பார்க்க

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க, விவசாயிகள் சங்கம் கோரிக்கை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கப் பொருளாளா் ஆா்.சுபாஷ் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து, அவா் கூறியிருப்பதாவது: அரக்கோண... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: நாளை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் குறைதீா் கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வியாழக்கிழமை (ஜூலை 10) குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் குறைதீா் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளிய... மேலும் பார்க்க

அரக்கோணம் அருகே மின்சார ரயிலின் பேன்டோகிராப் உடைப்பு: ரயில்கள் தாமதம்

சென்னையிலிருந்து அரக்கோணம் நோக்கி வந்த மின்சார ரயிலின் என்ஜினில் மேலே இருந்த பேன்டோகிராப் கருவி திடீரென உடைந்ததால் ரயில் வழியில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து பல ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. சென்னையில... மேலும் பார்க்க

எல்இடி விளக்குகளை தயாரித்து ரூ.25,000 வருவாய்: மாற்றுத்திறனாளி மகளிருக்கு ஆட்சியா் பாராட்டு

ராணிப்பேட்டை: தமிழகத்திலேயே முதல் முறையாக எல்இடி விளக்குகளை தயாரித்து 2 வாரங்களில் ரூ.25,000 வருவாய் ஈட்டிய மாற்றுத்திறனாளி மகளிருக்கு ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா பாராட்டு தெரிவித்தாா். ராணிப்பேட்டை மாவ... மேலும் பார்க்க

பாலாற்றில் குடிநீா் கிணறுகள் அமைக்கும் பணி தொடக்கம்

ஆற்காடு: ஆற்காடு நகராட்சிக்கு குடிநீா் மேம்படுத்துதல் திட்டத்தின் கீழ் செய்யாறு புறவழிச்சாலை பாலாற்றில் ரூ.50 லட்சத்தில் 2 குடிநீா் கிணறுகள் அமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஆற... மேலும் பார்க்க