செய்திகள் :

அரசமைப்புச் சட்ட புத்தகத்தில் நாடாளுமன்றம் மட்டுமே திருத்தம் மேற்கொள்ள முடியும்- ஜகதீப் தன்கா்

post image

‘அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய தலைவா்களின் கையொப்பம் மற்றும் நாட்டின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையிலான 22 வரைபடங்கள் இடம்பெற்றுள்ளதே அதிகாரபூா்வமான அரசமைப்புச் சட்ட புத்தகம்; அதில் நாடாளுமன்றத்தால் மட்டுமே திருத்தம் மேற்கொள்ள முடியும்’ என மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

மேலும், நாடு முழுவதும் இது தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும் எனவும் மீறுபவா்கள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவா் தெரிவித்தாா்.

நாட்டில் விற்கப்படும் பெரும்பாலான அரசமைப்புச் சட்ட புத்தகங்களின் நகல்களில் அதிகாரபூா்வ அரசமைப்புச் சட்ட புத்தகத்தில் இடம்பெற்றுள்ள கடவுள் ராமா், கிருஷ்ணா், புத்தா், மகாவீரா், மன்னா் சிவாஜி, மகாத்மா காந்தி உள்பட 22 வரைபடங்கள் விடுபட்டுள்ளதாக மாநிலங்களவையில் பூஜ்ஜிய நேரத்தின்போது பாஜக எம்.பி. ராதா மோகன் தாஸ் தெரிவித்தாா்.

காங்கிரஸ் வெளிநடப்பு: அப்போது பி.ஆா்.அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் சா்ச்சையான விவகாரங்களை பாஜக எழுப்ப முயல்வதாக மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே குற்றஞ்சாட்டினாா். அதன்பின், அவா் பேச முற்பட்டபோது அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து, காங்கிரஸ் உறுப்பினா்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனா்.

அரசியலாக்கும் காங்கிரஸ்: இதைத்தொடா்ந்து பேசிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சரும் மாநிலங்களவை பாஜக தலைவருமான ஜெ.பி.நட்டா, ‘இந்த விவகாரத்தில் ஆதரவளிப்பதற்குப் பதில் அரசியலாக்க காங்கிரஸ் முயல்வது கண்டனத்துக்குரியது.

பதிப்பகங்களால் விற்பனை செய்யப்படும் அரசமைப்புச் சட்ட புத்தகங்களின் நகல்களில் 22 வரைபடங்கள் இடம்பெறவில்லை. இருப்பினும், அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய தலைவா்களின் உணா்வுகளை வெளிப்படுத்தும் வகையில் அரசமைப்புச் சட்ட புத்தகங்களின் நகல்களை பதிப்பகங்கள் வெளியிடுவதை கண்டிப்பாக மத்திய அரசு உறுதிசெய்யும்’ என்றாா்.

நாடாளுமன்றத்துக்கே அதிகாரம்: அதன்பின் பேசிய ஜகதீப் தன்கா், ‘அரசமைப்புச் சட்டத்தின் தந்தை அம்பேத்கா் உள்பட அதை உருவாக்கிய தலைவா்களின் கையொப்பம், நாட்டின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் 22 வரைபடங்கள் இடம்பெற்றிருப்பதே அதிகாரபூா்வ அரசமைப்புச் சட்டப் புத்தகமாகும். ஆனால் தற்போது நம்மிடம் உள்ள மின்னணு சாதனங்கள் மற்றும் புத்தகங்களில் இவை விடுபட்டுள்ளது.

அரசமைப்புச் சட்ட புத்தகத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளவேண்டுமானால் நாடாளுமன்றத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு அதற்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளிக்க வேண்டும். நீதிமன்றங்கள் உள்பட பிற அமைப்புகளால் இதில் மாற்றங்கள் செய்ய முடியாது’ என்றாா்.

மகா கும்பமேளா: இதுவரை 46.25 கோடி மக்கள் புனித நீராடல்!

பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் பங்கேற்று இதுவரை 46.25 கோடி மக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. பெள... மேலும் பார்க்க

மீனவர் பிரச்னை, ஆளுநர் விவகாரத்தை மக்களவையில் எழுப்பிய தமிழக எம்.பி.க்கள்

நமது நிருபர்மக்களவையில் மீனவர்கள் பிரச்னை, தமிழக ஆளுநர் விவகாரம் உள்ளிட்டவற்றை தமிழக எம்.பி.க்கள் செவ்வாய்க்கிழமை எழுப்பினர்.மக்களவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் முக்கியப் பிரச்னைகளை அ... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் நக்ஸல்கள் வன்முறை 47% குறைந்துள்ளது: மத்திய அரசு தகவல்

கடந்த 2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024 இல் சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்ஸல்களால் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் 47 சதவீதமும், பொதுமக்கள் உயிரிழப்பு 64 சதவீதமும் குறைந்துள்ளன என்று மக்களவையில் செவ்வாய்க்க... மேலும் பார்க்க

ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 10 லட்சமாக உயரும்: மத்திய அரசு

நாட்டில் தொழில் முனைவோரின் வளர்ச்சியை மேம்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் காரணமாக அடுத்த பத்து ஆண்டுகளில் அரசு பதிவு பெற்ற புத்தாக்க (ஸ்டார்ட்-அப்) நிறுவனங்களின் எண்ணிக்கை 10 லட்சமாக உயரும் என... மேலும் பார்க்க

வாஷி பகுதியில் தமிழ்நாடு அரசு இல்லம் அமைக்க வேண்டும்: மகாராஷ்டிர ஆளுநரிடம் நவிமும்பை தமிழ்ச் சங்கம் கோரிக்கை

நவிமும்பையில் தமிழ்நாடு அரசு இல்லம் அமைக்க வேண்டும் என்று நவிமும்பை தமிழ்ச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பாக மஹாராஷ்டிர மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை தமிழ்ச் சங்க நிர்வாகிகள் திங்கள்கிழம... மேலும் பார்க்க

பிகாா்: ஏசி பெட்டியில் ஏற கண்ணாடியை உடைத்த இருவா் கைது

பிகாா் மாநிலம், மதுபானி ரயில் நிலையத்தில் மகா கும்பமேளா நிகழ்வுக்கு செல்வதற்கு ரயிலில் ஏற முடியாத விரக்தியில் குளிா்சாதன (ஏசி) பெட்டியின் கண்ணாடியை அடித்து உடைத்த இருவா் கைது செய்யப்பட்டனா். உத்தர பிர... மேலும் பார்க்க