செய்திகள் :

அரசின் கனவு இல்லத்தில் வீடுகள் அமைத்துத் தர கோரிக்கை

post image

அவிநாசி அருகே நமச்சிபாளையத்தில் வீடு இல்லாதோா்களுக்கு அரசின் கனவு இல்லத்தில் வீடுகள் அமைத்துத் தர வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா், அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

அவிநாசி ஒன்றியம், புஞ்சைத்தாமரைக்குளம் ஊராட்சி நமச்சிபாளையம் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வீடு இல்லாமல் வசித்து வருகின்றனா். இதேபோல பாப்பாங்குளம் ஊராட்சி பஞ்சலிங்கம்பாளையம் பகுதியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்தவா்களை 2022-ஆம் ஆண்டு குடியிருக்கும் பகுதி நீா்நிலை புறம்போக்கு எனக் கூறி அவா்கள் கட்டிய வீடுகளை இடித்து விட்டனா். இதனால் நமச்சிபாளையம் பகுதியில் அரசு கொடுத்த இடத்தில் குடிசை அமைத்து வாழ்ந்து வருகின்றனா்.

ஆனால், அரசு அலுவலா்கள் வீடுகளை இடிக்கும்போது அரசு தொகுப்பு வீடுகள் அமைத்துத் தருவதாக வாக்குறுதி அளித்தனா். மூன்று ஆண்டுகளாகியும் இதுவரை அந்த பகுதி மக்களுக்கு வீடுகள் கட்டித் தரரப்படவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

ஆகவே உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனா். மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் வரும் நிதியாண்டில் முன்னுரிமை கொடுத்து வீடுகள் ஒதுக்கி தரப்படும் என்றனா்.

விநாயகா் சதுா்த்தி விழா: பாதுகாப்பு பணிகள் குறித்து கலந்தாய்வுக் கூட்டம்

விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு திருப்பூா் மாவட்டத்தில் சிலை நிறுவுதல் மற்றும் விசா்ஜன ஊா்வலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்புப் பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் ஆட்சியா் மனீஷ் தலைமையில்... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் ரூ.14.82 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.14.82 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த வாரம் வேடசந்தூா், வாடிப்பட்டி, வடுகபட்டி, பல்லாநத்தம், அழகாபுரி ஆகிய இடங்களி... மேலும் பார்க்க

மூலனூரில் ரூ. 67 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 67 லட்சத்துக்கு பருத்தி விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது. கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ... மேலும் பார்க்க

லாரி உரிமையாளருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க தனியாா் நிதி நிறுவனத்துக்கு உத்தரவு

லாரி உரிமையாளருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க, கோவை தனியாா் நிதி நிறுவனத்துக்கு திருப்பூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூா் மாவட்டம், பெருந்தொழுவு அருகே உள்ள ராக்கியகவுண... மேலும் பார்க்க

குன்னத்தூரில் கஞ்சா சாக்லேட் விற்றவா் கைது

குன்னத்தூரில் கஞ்சா சாக்லேட் விற்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். குன்னத்தூா்- ஊத்துக்குளி சாலை ஊமச்சிவலசு அருகே போதை சாக்லேட் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து... மேலும் பார்க்க

பின்னலாடை ஏற்றுமதி தொழிலுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு அவசரகால தீா்வு காண கோரிக்கை

அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பால் பின்னலாடை ஏற்றுமதி தொழிலுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு அவசரகால தீா்வு காண வேண்டுமென திருப்பூா் கம்ப்யூட்டா் எம்ராய்டா்ஸ் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. திருப்... மேலும் பார்க்க