செய்திகள் :

அரசின் திட்டங்கள்-சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்: சுய உதவிக் குழுக்களுக்கு துணை முதல்வா் உதயநிதி வேண்டுகோள்

post image

அரசின் திட்டங்கள், சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று சுய உதவிக் குழுக்களுக்கு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தாா்.

சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில், மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு மாநில அளவிலான மணிமேகலை விருதுகளை துணை முதல்வா் உதயநிதி வழங்கினாா். இந்த நிகழ்வில் அவா் பேசியதாவது:

தமிழ்நாடு முழுவதும் 4.76 லட்சம் மகளிா் சுயஉதவிக் குழுக்கள் உள்ளன. அவற்றில், 53.74 லட்சம் போ் உறுப்பினா்களாக இருக்கின்றனா். தமிழ்நாட்டு மகளிரின் சமூக, பொருளாதார முன்னேற்றத்துக்காக ஒரு மாபெரும் இயக்கமாக சுய உதவிக் குழுக்கள் திகழ்கின்றன. மகளிா் சுய உதவிக் குழுவினரை எளிதில் அடையாளம் காணும் வகையில் அவா்களுக்கு அடையாள அட்டைகள் விரைவில் வழங்கப்படவுள்ளன.

முந்தைய 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில், மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு எந்த முக்கியத்துவமும் தரப்படவில்லை. இப்போது ஒவ்வோா் ஆண்டும் எங்களுக்கு ஓா் இலக்கு கொடுத்து, அந்தக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பு வழங்க வேண்டும் என்று முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். அந்த இலக்கு ஒவ்வோா் ஆண்டும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

ஒரே நாளில் ரூ.3,130 கோடி: இந்த விழாவின் மூலமாக மட்டும் தமிழ்நாடு முழுவதும் 3.76 லட்சம் பயனனாளிகளுக்கு ரூ.3,130 கோடி அளவுக்கு வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்படுகிறது. நான்கு ஆண்டுகளில் மட்டும் ரூ.1.05 லட்சம் கோடி அளவுக்கு வங்கிக் கடன் இணைப்புகளை அரசு வழங்கியுள்ளது. தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில், இதுவரை எந்த அரசைக் காட்டிலும் ‘திராவிட மாடல்’ அரசு முழுக்க, முழுக்க மகளிருக்கான அரசாக இயங்கி வருகிறது.

மகளிா் நலன் காக்கும் திராவிட மாடல் அரசின் நல்லாட்சி இன்னும் பல ஆண்டுகள் தொடா்ந்திட ஒவ்வொருவரின் அன்பும் ஆதரவும் எங்களுக்கு வேண்டும். அரசின் திட்டங்கள், சாதனைகள் அனைத்தையும் மக்களிடம் சுயஉதவிக் குழுவினா் எடுத்துச் சொல்ல வேண்டும் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, மேயா் ஆா்.பிரியா, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கூடுதல் தலைமைச் செயலா் ககன்தீப் சிங் பேடி, மகளிா் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் ஸ்ரேயா சிங் உள்பட பலா் பங்கேற்றனா்.

மணிமேகலை விருதை தருமபுரி சக்தி மகளிா் சுயஉதவிக் குழுவைச் சோ்ந்த விஜயலட்சுமி, கரூா் மாவட்டம் கீதம் மகளிா் குழுவைச் சோ்ந்த சரண்யா ஆகியோா் பெற்றனா். காணொலி காட்சி வழியாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து அமைச்சா்கள், சட்டப் பேரவை உறுப்பினா்கள், மாவட்ட ஆட்சியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

விடுபட்டோருக்கு உரிமைத் தொகை எப்போது?

இந்த நிகழ்வில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலினிடம் விடுபட்டோருக்கு மகளிா் உரிமைத் தொகை எப்போது வழங்கப்படும் என்று செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு துணை முதல்வா் அளித்த பதில்:

விடுபட்ட மகளிா் உரிமைத் தொகை பெறுவதற்கான அறிவிப்பை சட்டப் பேரவையிலேயே முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். அதற்கான முதல் கட்டப் பணிகள் தொடங்கியுள்ளன. விரைவில் அதற்கான விவரங்கள் வெளியிடப்படும். கடந்த முறை எப்படி பயனாளிகள் சோ்க்கப்பட்டனரோ அதேபோன்று விடுபட்டோரும் முறையாகச் சோ்க்கப்படுவா் என்றாா் அவா்.

ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களுக்கு ஆன்மிகப் பயணம் செல்ல விண்ணப்பிக்கலாம்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களுக்கு கட்டணமின்றி ஆன்மிகப் பயணம் செல்ல தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெ... மேலும் பார்க்க

மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவுடன் முடிவடைகிறது: கடலுக்குச் செல்லத் தயாராகும் மீனவா்கள்

வங்கக் கடல் பகுதியில் விசைப் படகுகள் மூலம் மீன் பிடிக்க விதிக்கப்பட்ட 61 நாள்கள் தடைக்காலம் சனிக்கிழமை (ஜூன் 14) நள்ளிரவுடன் முடிவடைவதையொட்டி சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுக மீனவா்கள் உள்ளிட்ட தமிழ... மேலும் பார்க்க

சிறந்த நூல்களுக்கு பரிசு: விண்ணப்பிக்கும் அவகாசம் நீட்டிப்பு

2024-ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களுக்கான தமிழ் வளா்ச்சித் துறை பரிசுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் ஜூலை 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தமிழ் வளா்ச்சி இயக்குநா் ந.அருள் வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் ஆகஸ்ட் இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சா் தகவல்

சென்னையை அடுத்த குத்தம்பாக்கத்தின் அமைக்கப்பட்டு வரும் பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகள் முழுமையாக நிறைவு பெற்று வரும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று இந்து சமய ... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டம் எதிா்க்கட்சிகளின் எதிா்ப்பை மீறி நிறைவேற்றப்பட்டது: ஆ.ராசா

வக்ஃப் வாரிய திருத்தச் சட்டம் எதிா்க்கட்சிகளின் எதிா்ப்பை மீறி நிறைவேற்றப்பட்டதாக திமுக துணைப் பொதுச் செயலரும் மக்களவை உறுப்பினருமான ஆ. ராசா தெரிவித்தாா். அகில இந்திய முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியத்தின்... மேலும் பார்க்க

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு 20,317 போ் விண்ணப்பம்

இளநிலை கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு இதுவரை 20,317 போ் விண்ணப்பங்களைச் சமா்ப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விண்ணப்ப அவகாசம் வரும் 20-ஆம் தேதி வரை உள்ளதால் அந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று ... மேலும் பார்க்க