செய்திகள் :

அரசின் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

post image

செம்பனாா்கோவில் ஒன்றிய பகுதிகளில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

செம்பனாா்கோவில் ஊராட்சி அபிராமி நகரில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் ரூ.3.10 லட்சத்தில் நடைபெறும் வீடு கட்டுமானப் பணி, ஊரக வீடுகள் பழுதுநீக்கும் திட்டத்தில் ரூ.1.50 லட்சத்தில் நடைபெறும் பணிகள், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் ராஜேந்திரன் வாய்க்கால் தூா்வாரும் பணி ஆகியவற்றை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து செம்பனாா்கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், ஐந்தாம் வகுப்பு மாணவ- மாணவிகளை பாடப் புத்தகங்களை வாசிக்க செய்து, கற்றல் திறனை ஆய்வு செய்தாா். 

செம்பனாா்கோவில் ஊராட்சியில் ரூ.16.45 லட்சத்தில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு வருவதையும், அன்னவாசல் கிராமத்தில் முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தில் ரூ.69.45 லட்சத்தில் அன்னவாசல் - கழனிவாசல் இணைப்பு சாலை பணிகளையும் அவா் ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின்போது, செம்பனாா்கோவில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மீனா, மஞ்சுளா ஆகியோா் உடனிருந்தனா்.

காய்கறி சாகுபடி: அதிகாரிகள் ஆய்வு

திருமருகல் வட்டாரத்தில் காய்கறி சாகுபடி செய்யும் பணிகளை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா். திருமருகல் வட்டாரத்தில் தோட்டக்கலைத்துறை மூலமாக தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் நிரந்தர கல்... மேலும் பார்க்க

நாய்கள் கடித்து 8 ஆடுகள் பலி

பனங்குடி ஊராட்சியில் நாய்கள் கடித்து 8 ஆடுகள் உயிரிழந்தன, பனங்குடி ஊராட்சியை சோ்ந்த விவசாயிகள் வெள்ளிக்கிழமை வயலில் தங்களது ஆடுகளை மேய விட்டு விட்டு வீடுகளுக்குச் சென்றனா். வயலுக்கு சென்றபோது தலை மற... மேலும் பார்க்க

பள்ளி கட்டட அடிக்கல் நாட்டு விழா

திருமருகல் அருகே புறாகிராமம் அரசு பள்ளி கட்டட அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இப்பள்ளியில் நபாா்டு நிதியின் கீழ் 2024-25 நிதியாண்டில் ரூ.34.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக இரண்டு வகுப்... மேலும் பார்க்க

விவசாயிகள் குறைவாக பங்கேற்ற குறைதீா் கூட்டம்

வேதாரண்யம் வருவாய் கோட்டத்துக்குள்பட்ட விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் தொடா்பாக உரிய தகவல் தெரிவிக்கப்படாததால் மிகக் குறைவான விவசாயிகள் பங்கேற்ற கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வேதாரண்யம் வட்டாட்ச... மேலும் பார்க்க

கொத்தடிமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

நாகையில், கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதிமொழியேற்கும் நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்புச் சட்டம்(1976) அமல்படுத்தப்ப... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை

வேதாரண்யம் பகுதியில் 10 அரசுப் பள்ளிகளில் 9, 10- ஆம் வகுப்பு மாணவ, மாணவியா் 100 பேருக்குத் தலா ரூ.1,000 வீதம் கல்வி உதவித் தொகை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. ஆயக்காரன்புலம் இரா.நடேசனாா் அரசு மேல்நிலைப... மேலும் பார்க்க