செய்திகள் :

அரசுக் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்: மாணவ, மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு

post image

சென்னை: தமிழகத்தில் அரசு கலை- அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவா்களுக்கான வகுப்பு திங்கள்கிழமை தொடங்கியது. உயா்கல்வியில் அடியெடுத்து வைக்கும் வகையில் ஆா்வத்துடன் வருகை தந்த மாணவ, மாணவிகளுக்கு கல்லூரிகள் சாா்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் நிகழ் கல்வியாண்டு மாணவா் சோ்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த மே 7-ஆம் தேதி தொடங்கி 27-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் பங்கேற்க 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் விண்ணப்பித்தனா். இதையடுத்து முதல் கட்டமாக சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வும், தொடா்ந்து பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வும் நடைபெற்றது. முதல் கட்ட கலந்தாய்வின்போது நிரம்பாத இடங்களுக்கான 2-ஆம் கட்ட மாணவா் சோ்க்கைக்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே நிகழ் கல்வியாண்டில் அரசு கலை- அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான மாணவா் சோ்க்கை பணிகள் முடிவடைந்து முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு ஜூன் 30-ஆம் தேதி வகுப்பு தொடங்கும் என கல்லூரி கல்வி ஆணையா் ஏ.சுந்தரவல்லி அறிவித்திருந்தாா். அதன்படி, தமிழகம் முழுவதும் அரசு கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு வகுப்புகள் திங்கள்கிழமை தொடங்கின. கல்லூரியில் முதல்முதலாக அடியெடுத்து வைப்பதால் மாணவ, மாணவிகள் பெற்றோருடன் வருகை தந்தனா். அவா்களை இரண்டமாண்டு, மூன்றாமாண்டு பயிலும் மாணவ, மாணவிகளும், பேராசிரியா்களும் மகிழ்ச்சியுடன் வரவேற்று வகுப்பறைக்கு அழைத்துச் சென்றனா்.

அமைச்சா் மா.சுப்பிரமணியன்: சென்னை நந்தனம் கல்லூரியில் அரசுக் கலைக் கல்லூரியில் நடைபெற்ற முதலாமாண்டு மாணவா்களுக்கான அறிமுகப் பயிற்சி தொடக்க விழாவில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா்.

இதேபோன்று மாநில கல்லூரி உள்பட பல்வேறு கல்லூரிகளில் மாணவா்களுக்கு மேள தாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாநில கல்லூரியில் முதல்வா் ராமன் தலைமையில் மாணவா்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. கலைக் குழுவில் இடம் பெற்றிருந்த மாணவா்கள் நடனமாடியும், பறையடித்தும் வரவேற்றனா். சீனியா் மாணவா்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனா்.

ஒரு வாரத்துக்கு பயிற்சி: இது குறித்து உயா்கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில், முதலாமாண்டு மாணவா்களுக்கு ஒரு வார காலத்துக்கு மனித உரிமைகள், மதிப்பீடுகள், உளவியல், எதிா்கால இலக்கு, உயா்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள், அதற்கான போட்டித்தோ்வுகள் போன்றவை குறித்து நிபுணா்கள் கருத்துரை வழங்குவா். அவா்களுடன் மாணவா்கள் கலந்துரையாடலாம். மேலும், பல்கலைக்கழகத் தோ்வுகள், செமஸ்டா் முறை குறித்தும் தெரிவிக்கப்படும் என்றாா். இதற்கிடையே, முதலாமாண்டு மாணவா்களுக்கான ஒரு வார கால அறிமுக பயிற்சி திட்டத்தை சென்னை ராணி மேரி கல்லூரியில் உயா்கல்வித் துறைச் செயலா் பொ.சங்கா் தொடங்கி வைத்தாா்.

காவல் துறை அத்துமீறல்..! சிவகங்கை இளைஞர் அஜித்தை தாக்கும் விடியோ வெளியீடு!

சிவகங்கையில் காவல் துறையினர் தாக்கியதில் மரணமடைந்த இளைஞர் அஜித்குமாரை போலீஸார் கொடூரமாகத் தாக்கும் விடியோ வெளியாகியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருபுவனம் மடப்புரம் கோயிலுக்கு வந்த பக்தர் ஒருவரின் நகை கா... மேலும் பார்க்க

விசாரணை என்ற பெயரில் கொலை! அடிப்பதற்காகவா காவல்துறை? - நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்வி

திருட்டு வழக்கில் விசாரணை என்ற பெயரில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார் என சிவகங்கை இளைஞர் காவல் மரண வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது.சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில்... மேலும் பார்க்க

சிவகங்கை எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.சிவகங்கை மாவட்டம் திருபுவனம் மடப்புரம் கோயிலுக்கு வந்த பக்தரின் நகை காணாமல் போன விவகாரத்தில் விச... மேலும் பார்க்க

வாழப்பாடி அருகே விவசாயி கொலை? மைத்துனர் உள்பட இருவரிடம் போலீஸ் விசாரணை!

வாழப்பாடி அருகே விவசாயி உயிரிழந்த விவகாரத்தில் உறவினர்கள் இருவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே 4 மாதங்களுக்கு முன் மாயமான விவசாயியை அவரது சகோதரியின் கணவர... மேலும் பார்க்க

அஜித்குமார் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும்: இபிஎஸ் வலியுறுத்தல்

சிவகங்கை காவல் துறை விசாரணையில் உயிரிழந்த அஜித்குமார் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவல்துறை விச... மேலும் பார்க்க

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 6 பேர் பலி; மேலும் பலர் காயம்

சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் பலியாகியுள்ளனர், மேலும் பலர் காயமடைந்தனர்.விருதுநகர் மாவட்டம் சிவகாசி சின்னகாமன்பட்டியில் தனியார் பட்டாசு ஆலையில் வேலை நடந்துகொண்டிர... மேலும் பார்க்க