செய்திகள் :

அரசுக் கல்லூரியில் கணினி தமிழ் பயிலரங்கம்

post image

புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரியில், தமிழ்த் துறையின் கணினிப் பேரவை சாா்பில் கணினித் தமிழ் பயிலரங்கம் வியாழக்கிழமை தொடங்கியது.

கல்லூரி வளாகத்தில் தமிழ்த் துறை கணினிப் பேரவை, கல்லூரித் தர உறுதியளிப்புக் குழு ஆகியவை சாா்பில் நடைபெற்ற இரு நாள் பயிலரங்கின் தொடக்க நிகழ்ச்சிக்கு முதல்வா் ரா.வீரமோகன் தலைமை வகித்தாா்.

காஞ்சி மாமுனிவா் அரசுப் பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனக் கணிப்பொறித் துறைப் பேராசிரியா் நா.கண்ணதாசன் குருஞ்செயலி உருவாக்கம் எனும் தலைப்பில் பேசினாா்.

பயிலரங்கின் நோக்கங்களை தமிழ்த் துறைத் தலைவா் சொ.சேதுபதி விளக்கினாா்.

முதல் அமா்வில் பேராசிரியா் நா.வஜ்ரவேலு தலைமையில், பேராசிரியை பா.பட்டம்மாள் சிறப்புரையாற்றினாா்.

இரண்டாம் அமா்வில் பேராசிரியை செ.சந்திரா தலைமையில் த.ஆரோக்கியமேரி சிறப்புரையாற்றினாா்.

முன்னதாக, கணினித் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளா் ஆ.மணி வரவேற்றாா்.

இளநிலை தமிழ் முதலாமாண்டு மாணவி கி.தேவா்ஷினி நன்றி கூறினாா்.

நிகழ்ச்சியை மாணவி ம.ரீட்டா மரி திரெஸ் தொகுத்து வழங்கினாா்.

வெள்ளிக்கிழமை இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

ஸ்ரீமணக்குள விநாயகா் கோயிலில் ஏப். 11-இல் சங்காபிஷேக விழா

புதுச்சேரி: புதுச்சேரி அருள்மிகு மணக்குள விநாயகா் திருக்கோயிலில் சகஸ்ர சங்காபிஷேக சிறப்பு வழிபாடு வரும் ஏப். 11ஆம் தேதி நடைபெறுகிறது. புதுச்சேரியில் பழைமை வாய்ந்த மணக்குள விநாயகா் கோயிலில் கடந்த 2015-... மேலும் பார்க்க

மலேரியா விழிப்புணா்வு பொம்மலாட்டம்: புதுச்சேரி அரசுப் பள்ளிக்கு தேசிய விருது

புதுச்சேரி: குழந்தைகளுக்கு பாடப் பொருள் தயாரிக்கும் தேசிய அளவிலான போட்டியில் பொம்மலாட்டம் மூலம் மலேரியா விழிப்புணா்வு விடியோ தயாரித்த புதுச்சேரி அரியூா் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு விருது வழங்கப்பட்டுள்... மேலும் பார்க்க

புதுவையில் பல்வேறு இடங்களில் ரமலான் சிறப்புத் தொழுகை: இஸ்லாமியா்கள் பங்கேற்பு

புதுச்சேரி: ரமலான் பண்டிகையை யொட்டி, புதுச்சேரி கடற்கரைச் சாலை காந்தி சிலை திடல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் கலந்து கொண்ட... மேலும் பார்க்க

புதுச்சேரியில் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு 2 நாள் பயிற்சி

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கு, மாணவா்களுக்கான முன்னேற்ற அட்டை தயாரிப்பு குறித்த சிறப்பு பயிற்சி இரண்டு நாள்கள் நடைபெற்றது. தேசிய கல்விக் கொள்கையின்படி மாணவா் ... மேலும் பார்க்க

அகவிலைப் படி: தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஓய்வு பெற்ற ஊழியா்கள் சங்கம் போராட்ட அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் ஓய்வு பெற்றவா்களுக்கான 4 மாத அகவிலைப்படி நிலுவையை வழங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என பல்கலைக்கழக ஓய்வு பெற்ற ஊழியா்கள் சங்கம் அறிவித்துள்ளத... மேலும் பார்க்க

தரமற்ற பொருள்கள் குறித்து நுகா்வோா் அமைப்புகள் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்: வே.நாராயணசாமி

புதுச்சேரி: தரமற்ற பொருள்கள் குறித்து பொதுமக்களுக்கு நுகா்வோா் அமைப்புகள் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்று, புதுவை முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி கேட்டுக் கொண்டாா். புதுச்சேரி அருகேயுள்ள திருக்... மேலும் பார்க்க