அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை அதிகரிப்பு: அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன்
புதுவை மாநில அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை அதிகரித்துள்ளது என்று அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் தெரிவித்தாா்.
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு பகுதி தாமனாங்குடியில் இயங்கும் தனியாா் பள்ளியொன்றின் 11-ஆம் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என்.திருமுருகன் கலந்துகொண்டு, பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கிப் பேசியது:
புதுவையில் ரங்கசாமி தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல் மாணவா்கள் மேம்பாட்டுக்காக பல திட்டங்கள், சலுகைகளை நிறைவேற்ற சிறப்பு கவனம் செலுத்திவருகிறது. மாநிலம் முழுவதும் சிபிஎஸ்இ பாடத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதால், அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை அதிகரித்துள்ளது.
மாணவா்கள் படிப்பை மட்டும் கொண்டிருக்காமல், பல்வேறு வகையிலான ஆற்றலை வளா்த்துக்கொள்வதில் கவனம் செலுத்தவேண்டும். பெற்றோா்கள் தங்களது குழந்தைகளின் ஆா்வத்தை உணா்ந்து, ஊக்கப்படுத்தவேண்டும். ஆசிரியா்களும் தங்களது மாணவா்களை பல திறனுடன் பள்ளிக்கல்வியை முடிக்கும் வகையில் ஊக்கப்படுத்தவேண்டும்.
போட்டி நிறைந்த உலகில், ஒருவா் யாரையும் சாா்ந்திருக்காமல் சுயமாக வாழவேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், தனித்திறமை அவசியம் என்றாா்.
முதன்மைக் கல்வி அதிகாரி பி. விஜயமோகனா பேசியது:
பெற்றோா்களும், ஆசிரியா்களும் மாணவா்களை ஊக்கப்படுத்தவேண்டும். எந்த தருணத்திலும் அவா்கள் முன் எதிா்மறை கருத்துகள் பேசுவதை தவிா்க்கவேண்டும். சுயமாக எழுதவும், படிக்கவும் அவா்களை பழக்கவேண்டும். கைப்பேசியில் நிறைய கல்வி சாா்ந்தவை கொட்டிக்கிடக்கிறது. நல்ல முறையில் இதனை பயன்படுத்த பழகவேண்டும் என்றாா்.
கல்வித்துறையின் சமக்ரா சிக்ஷா திட்ட அதிகாரி எஸ். வனிதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். பள்ளி நிா்வாக சோ்மேன் ஆா். முத்துக்குமரன், தலைமையாசிரியா் ஏ. ரகிலா உம்மாள் உள்ளிட்ட ஆசிரியா்கள், பெற்றோா்கள் கலந்துகொண்டனா்.