செய்திகள் :

அரசுப் பள்ளியின் ஒரு சுவரில் பெயின்ட் அடிக்க 233 தொழிலாளர்கள்; 4 கதவுகளுக்கு 425 பேர்!

post image

மத்தியப் பிரதேசத்தில் அரசுப் பள்ளிகளில் பெயின்ட்டுக்காக செலவிடப்பட்டதாக வெளியிடப்பட்ட கட்டண விவரங்கள் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் ஷாஹ்தோல் மாவட்டம், சாகண்டி கிராமத்தில் ஓர் அரசுப் பள்ளியின் சுவரில் வண்ணப்பூச்சுக்காக 233 தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டதாகவும், நிபானியா என்ற மற்றொரு கிராமத்தில் அரசுப் பள்ளியில் 10 ஜன்னல்கள் மற்றும் 4 கதவுகளுக்கு வண்ணப்பூச்சு மேற்கொள்ள 425 தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டதாகவும், அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய கட்டண விவரங்களும் சமூக ஊடகங்ளில் வெளியாகியுள்ளன.

சாகண்டி பள்ளியின் ஒரு சுவருக்காக 65 கொத்தனார்கள் உள்பட 233 தொழிலாளர்களுடன் 4 லிட்டர் பெயின்ட் செலவிடப்பட்டதாகவும், வேலைக்கான கட்டணமாக ரூ. 1.07 லட்சம் செலவு வந்ததாக கட்டண விவரம் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமின்றி, நிபானியா பள்ளியில் 10 ஜன்னல்கள் மற்றும் 4 கதவுகளுக்காக 150 கொத்தனார்கள் உள்பட 425 தொழிலாளர்களுடன் 20 லிட்டர் பெயின்ட் செலவிடப்பட்டு, அதன் கட்டணமாக ரூ. 2.3 லட்சமாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

இவையனைத்தும் அம்மாநில சட்டப்பேரவையின் மசோதாவில் அளிக்கப்பட்ட கட்டண விவரங்கள் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்த 2 பள்ளிகளின் கட்டணச் சீட்டுகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் முடிவில் வெளிவரும் உண்மைகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கல்வி அதிகாரி தெரிவித்தார்.

Madhya Pradesh School's Math Miracle

4 மாதங்களில் அரசியல் கட்சிகளுடன் 5,000 சந்திப்புகள்: தலைமை தோ்தல் ஆணையா்

‘அரசியல் கட்சிகளுடன் தொடா்ச்சியான சந்திப்புகளை தோ்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. கடந்த 4 மாதங்களில் மட்டும் இதுபோல 5,000 சந்திப்புகள் நிகழ்ந்துள்ளன’ என்று தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் சனிக்க... மேலும் பார்க்க

குஜராத்தில் நாட்டின் முதல் தேசிய கூட்டுறவு பல்கலைக்கழகம்: அமித் ஷா அடிக்கல்

குஜராத் மாநிலம், ஆனந்த் நகரில் நாட்டின் முதல் தேசிய கூட்டுறவு பல்கலைக்கழகம் அமைக்க மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை அடிக்கல் நாட்டினாா். இப்பல்கலைக்கழகம், கூட்டுறவுத் துறையில் பாரப... மேலும் பார்க்க

நேஷனல் ஹெரால்ட் வழக்கு: ‘ஏஜேஎல் சொத்துகளை விற்பனை செய்ய காங்கிரஸ் முயற்சிக்கவில்லை’

அசோசியேடட் ஜா்னல்ஸ் நிறுவன (ஏஜேஎல்) சொத்துகளை விற்பனை செய்ய காங்கிரஸ் முயற்சிக்கவில்லை என்று நேஷனல் ஹெரால்ட் வழக்கில் ராகுல் காந்தி தரப்பில் சனிக்கிழமை வாதிடப்பட்டது. தில்லி நீதிமன்றத்தில் சிறப்பு நீத... மேலும் பார்க்க

சைஃப் அலிகான் குடும்பத்தின் ரூ.15,000 கோடி சொத்து வழக்கு: மறுவிசாரணைக்கு உத்தரவு!

பாலிவுட் நடிகா் சைஃப் அலிகான் குடும்பத்தின் ரூ.15,000 கோடி மதிப்பிலான சொத்துகள் தொடா்பான வழக்கில் விசாரணை நீதிமன்றம் 25 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய தீா்ப்பை ரத்து செய்து, மறுவிசாரணைக்கு மத்திய பிரதேச ... மேலும் பார்க்க

விண்வெளியில் எலும்பு ஆரோக்கியம் குறித்து சுபான்ஷு சுக்லா ஆய்வு

விண்வெளியில் நுண்ஈா்ப்பு விசை சூழலுக்கேற்ப எலும்புகள் செயல்படும் விதம் குறித்து ஆக்ஸியம்-4 திட்டத்தின்கீழ் சா்வதேச விண்வெளி நிலையம் சென்றுள்ள இந்திய வீரா் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட குழுவினா் ஆய்வு மேற்... மேலும் பார்க்க

ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி பொருளாதார குற்றவாளி: தில்லி நீதிமன்றம்

அமலாக்கத் துறை மனுவில் பிரிட்டனைச் சோ்ந்த ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக அறிவித்து தில்லி நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது. சஞ்சய் பண்டாரிக்கு எதிராக கருப்புப் பண தட... மேலும் பார்க்க