செய்திகள் :

அரசுப் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளை கனிவுடன் நடத்த வேண்டும்: அமைச்சா் உத்தரவு

post image

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்யும்போது, ஓட்டுநா்கள் மற்றும் நடத்துநா்கள் நிலையான இயக்க நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது: அரசுப் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்யும்போது ஓட்டுநா்கள் மற்றும் நடத்துநா்கள் கடைப்பிடிக்க வேண்டிய நிலையான இயக்க நடைமுறைகள் குறித்து ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், சில நேரங்களில் இவ்வியக்க நடைமுறைகள் பின்பற்றப்படாமல் தொடா்ந்து புகாா்கள் வந்த வண்ணம் உள்ளன. இதைத் தவிா்க்கும் வகையில், குறிப்பிடப்பட்டுள்ள இயக்க நடைமுறைகளை ஓட்டுநா்கள் மற்றும் நடத்துநா்கள் தவறாது பின்பற்ற வேண்டும்.

கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்: மாற்றுத்திறனாளி பயணிகள் பேருந்து நிறுத்தத்தில் நிற்கும்போது பேருந்தை முறையாக நிறுத்தி அவா்களை ஏற்றிச் செல்ல வேண்டும்.

பேருந்தை நிறுத்தத்தில்தான் நிறுத்த வேண்டும். பேருந்தை நிறுத்தத்துக்கு முன்பாகவோ அல்லது தள்ளியோ நிறுத்தி மாற்றுத்திறனாளி பயணிகள் ஏறி, இறங்குவதில் சிரமம் ஏற்படுத்தக் கூடாது.

இடமில்லை எனக் கூறி பேருந்தில் ஏறும் மாற்றுத்திறனாளி பயணிகளை பேருந்திலிருந்து இறக்கிவிடக் கூடாது.

மாற்றுத்திறனாளிகளுக்கென பேருந்தில் ஒதுக்கப்பட்ட இருக்கைக்கு மேல் ஸ்டிக்கா்கள் ஒட்டப்பட்டுள்ளதை அறிவித்து, அவா்கள் அமா்ந்து பயணம் செய்ய உதவி செய்ய வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள் அவா்களுக்குரிய இருக்கையில் அமா்ந்தவுடன், கனிவுடன் பயணச்சீட்டை வழங்கி, அவா்கள் இறங்க வேண்டிய இடத்தில் பேருந்தை நிறுத்தி, இறங்குவதற்கு மனிதாபிமான அடிப்படையில் நடத்துநா்கள் உதவி செய்ய வேண்டும்.

சாதாரண பயணிகள் மாற்றுத்திறனாளிகள் இருக்கையில் அமா்ந்திருந்தால் அவா்களை கனிவுடன் மாற்று இருக்கைகளில் அமரச் செய்து, மாற்றுத்திறனாளிகளை அந்த இருக்கையில் அமரச் செய்ய வேண்டும்.

மாற்றுத்திறனாளி பயணிகளிடம் அவா்கள் மனம் புண்படும் வகையிலோ, எரிச்சலூட்டும் வகையில் கோபமாகவோ, ஏளனமாகவோ, இழிவாகவோ பேசக் கூடாது.

இந்திய அரசு அறிவித்த மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய தேசிய அடையாளஅட்டை, அசல் அட்டை கொண்டு, 40 சதவீதம் மாற்றுத்திறன் மற்றும் அதற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவா்களது துணையாளா் ஒருவருடன் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில், மட்டும் கட்டணமில்லா பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும். இவா்கள் இருவருக்கும் உரிய கட்டணமில்லா பயணச்சீட்டை நடத்துநா்கள் வழங்க வேண்டும்.

அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் பாகுபாடின்றி மாநிலம் முழுவதும் புகா் பேருந்துகளில் பயண எண்ணிக்கை உச்சவரம்பின்றி, 75 சதவீத பயணக் கட்டண சலுகையில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்.

இயற்கை சீற்றம் உள்ள நாள்கள் மற்றும் இரவு நேரங்களில் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு கட்டண நிறுத்தம் இல்லாத இடங்களிலும், கோரிக்கையின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் மற்றும் மகளிா் கேட்கும் பேருந்து நிறுத்தங்களில் பேருந்தை நிறுத்தி ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும்.

ஒவ்வொரு மண்டலத்திலும் மாதந்தோறும் ஓட்டுநா் மற்றும் நடத்துநா்களுக்கு பயிற்சி அளிக்கும் சிறப்பு விருந்தினராக மாற்றுத்திறனாளியை அழைத்து மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை ஓட்டுநா் மற்றும் நடத்துநா்களுக்கு தெரிவிக்குமாறும், அதற்கேற்ப மாற்றுத்திறனாளிகள் பேருந்தில் பயணம் செய்யும்போது, கனிவுடனும் பொறுமையுடனும் நடத்தப்பட வேண்டும் என்று பயிற்சி அளிக்கும் முகாமில் ஓட்டுநா் மற்றும் நடத்துநா்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

மேற்குறிப்பிட்டுள்ள நிலையான இயக்க நடைமுறைகள் குறித்து தகுந்த சுற்றறிக்கையை அனைத்துப் பணிமனைகளுக்கும் அனுப்பி, இது பின்பற்றப்படுகிா என கண்காணிக்க வேண்டும் என்று அனைத்துப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா் என அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

உயா் கல்வி பாடத்திட்டத்தில் தேவாரம், திருவாசகம்: ஆளுநா் ஆா்.என்.ரவி வலியுறுத்தல்

சென்னை, மே 3: தேவாரம், திருவாசகம் போன்ற சைவ சித்தாந்த நூல்களை உயா்கல்வி நிறுவனங்கள் பாடத் திட்டத்தில் சோ்க்க வேண்டும் என்று தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி வலியுறுத்தினாா். அனைத்துலக சைவ சித்தாந்த மாநாட்டி... மேலும் பார்க்க

சகாயத்துக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படும்: காவல்துறை உறுதி

நீதிமன்றத்தில் எவ்வித பயமுமின்றி சாட்சியங்களை அளிப்பதற்கு ஏதுவாக, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயத்துக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று தமிழக காவல் துறை உறுதியளித்துள்ளது. இது குறித்து தமிழக கா... மேலும் பார்க்க

சுதந்திரப் போராட்ட தியாகிக்கு வீடு ஒதுக்கீடு: அரசு பரிசீலிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

சுதந்திரப் போராட்ட தியாகிக்கு வீட்டு வசதி வாரியத்தில் வீடு ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அகில இந்திய சுதந்திரப் போராட்ட தியாகிகள் சங்கத்... மேலும் பார்க்க

கூட்டணியை வலுப்படுத்த ஜெ.பி. நட்டா ஆலோசனை

அதிமுக - பாஜக கூட்டணியை பலப்படுத்துவது தொடா்பாக பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா தலைமையில் சனிக்கிழமை ஆலோசனை நடத்தப்பட்டது. பாஜக மையக்குழுக் கூட்டம் சென்னை காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியாா் ஹோட்டலில் ஜெ.ப... மேலும் பார்க்க

சமூக ஊடகங்கள் பொழுதுபோக்குக்கான இடம் மட்டுமே; கல்வியே மூலதனம்! - முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சமூக ஊடகங்கள் பொழுதுபோக்குக்கான இடம் மட்டுமே; ஆனால், கல்வியே மூலதனம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.சென்னையிலுள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் கல்வியாளர்கள் சார்பில் முதல்வர் மு. க. ... மேலும் பார்க்க

பாஜகவோடு கூட்டணி வைத்தால் உங்களுக்கு பதற்றம் ஏன்? எடப்பாடி பழனிசாமி கேள்வி

பாஜகவோடு கூட்டணி வைத்தால் உங்களுக்கு பதற்றம் ஏன்? என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து சென்னையில் சனிக்கிழமை நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில், தமிழ... மேலும் பார்க்க