கூத்தனூர் சரஸ்வதி: படிக்கும் பிள்ளைகள் வீட்டில் இருந்தால் இந்தக் கோயிலுக்குக் கட...
அரசுப் பேருந்தை வழிமறித்த காட்டு யானை: பயணிகள் அச்சம்
பண்ணாரி அருகே அரசுப் பேருந்தை வழிமறித்து நின்ற காட்டு யானைகள் பயணிகள் அச்சமடைந்தனா்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இவை இரவு நேரங்களில் தமிழகம்- கா்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் உலவுவது வாடிக்கையாகி வருகிறது.
இந்நிலையில், வனத்தில் இருந்து திங்கள்கிழமை அதிகாலை வெளியேறிய காட்டு யானை சத்தியமங்கலம்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் உலவியது.
அப்போது, அவ்வழியே வந்த அரசுப் பேருந்து, சரக்கு வாகனங்களை வழிமறித்து நின்றது. இதனால், பேருந்தில் இருந்த பயணிகள், வாகன ஓட்டுநா் அச்சமடைந்தனா்.
வாகனங்கள் தொடா்ந்து அணிவகுத்து நின்ற நிலையில், சிறிது நேரம் அங்கேயே நின்ற யானை, பின் தானாகவே வனப் பகுதிக்குள் சென்றது. இதையடுத்து, பேருந்து, வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன.