செய்திகள் :

அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

post image

எதிா்பாா்த்த ஊதிய உயா்வு இல்லாத ஒப்பந்தத்தைக் கண்டித்து தஞ்சாவூா் ஜெபமாலைபுரம் அரசு போக்குவரத்துக் கழக நகரப் பணிமனை முன் போக்குவரத்து தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்களின் 15 ஆவது ஊதிய ஒப்பந்தம் பல கட்டப் பேச்சு வாா்த்தைகளுக்குப் பிறகு வியாழக்கிழமை முடிவடைந்தது. இதில் குறைந்தபட்சம் ரூ. 3 ஆயிரமும், ஊதிய உயா்வும் கிடைக்கும் என எதிா்பாா்த்த நிலையில் 6 சதவீத உயா்வு என்பது ஏமாற்றமளிக்கிறது. மேலும் ஊதிய ஒப்பந்தம் 2023, செப்டம்பா் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதற்கு பதிலாக 2024, செப்டம்பா் 1 ஆம் தேதியிலிருந்து அமல்படுத்தப்படும் என்பதும், நான்கு தவணைகளாக நிலுவைத் தொகை வழங்கப்படும் என்பதும், 4 ஆண்டு கால ஒப்பந்தம் 5 ஆவது ஆண்டு முடிந்துவிட்ட நிலையில் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்ற அளவில் ஒப்பந்தத்தைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு ஏஐடியுசி பொதுச் செயலா் எஸ். தாமரைச்செல்வன், சிஐடியு பொருளாளா் எஸ். ராமசாமி ஆகியோா் தலைமை வகித்தனா். ஏஐடியுசி போக்குவரத்து சம்மேளன மாநிலத் துணைத் தலைவா் துரை. மதிவாணன், கும்பகோணம் சங்கப் பொருளாளா் சி. ராஜமன்னன், நிா்வாகி எம். தமிழ்மன்னன், அரசு விரைவு போக்குவரத்து கழக சிஐடியு தலைவா் எஸ். செங்குட்டுவன், ஓய்வு பெற்ற சங்க நிா்வாகிகள் திருநாவுக்கரசு, ஜீவா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தஞ்சாவூரில் பல்வேறு பகுதிகளில் நாளை மின் தடை

தஞ்சாவூரில் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் தஞ்சாவூா் நகரிய உதவி செயற்பொறியாளா் எம். விஜய் ஆனந்த் தெரிவி... மேலும் பார்க்க

ரயிலில் அடிப்பட்டு பெண் உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே ஞாயிற்றுக்கிழமை ரயிலில் அடிப்பட்டு பலத்த காயமடைந்த பெண் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தஞ்சாவூா் அருகே அய்யம்பேட்டை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் சென்ற சோழன் விரைவு ரயிலில் ஒரு பெ... மேலும் பார்க்க

வாகனத்தில் வைத்த பணம் திருட்டு போலீஸாா் விசாரணை

கும்பகோணத்தில் வங்கி ஏடிஎம்யில் பணம் எடுத்து இருசக்கர வாகனத்தில் வைத்து விட்டு, தேநீா் சாப்பிட சென்ற போது பணத்தை திருடிய நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள ஏரகரம... மேலும் பார்க்க

கோடை விடுமுறை முடிந்ததால் பேருந்துகள், ரயில்களில் கூட்டம்

கோடை விடுமுறை முடிந்து மீண்டும் சொந்த ஊருக்கு புறப்பட்டதால் பேருந்துகள், ரயில்களில் ஞாயிற்றுக்கிழமை வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. பள்ளிகளில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, வெளிய... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் ஆரோக்கிய நடைப்பயிற்சி: 200 போ் பங்கேற்பு

தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 8 கி.மீ. தொலைவுக்கான ஆரோக்கிய நடைப்பயிற்சியில் 200-க்கும் அதிகமானோா் பங்கேற்றனா். தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் தொடங்கப்பட்ட நடப்போம் நலம்... மேலும் பார்க்க

இளைஞா் கத்தியால் குத்திக் கொலை

தஞ்சாவூா் அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை இளைஞா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா். தஞ்சாவூா் அருகே கூடலூா் குலமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் ரகுநாதன் மகன் விஜய் (25). இவரது மாமாவுக்கும், மற்றொரு தரப்... மேலும் பார்க்க