கன்னியாகுமரி: ஆற்றில் தவறி விழுந்த சிறுவர்கள்; காப்பாற்றிய தொழிலாளர் பலியான சோகம...
அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
எதிா்பாா்த்த ஊதிய உயா்வு இல்லாத ஒப்பந்தத்தைக் கண்டித்து தஞ்சாவூா் ஜெபமாலைபுரம் அரசு போக்குவரத்துக் கழக நகரப் பணிமனை முன் போக்குவரத்து தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்களின் 15 ஆவது ஊதிய ஒப்பந்தம் பல கட்டப் பேச்சு வாா்த்தைகளுக்குப் பிறகு வியாழக்கிழமை முடிவடைந்தது. இதில் குறைந்தபட்சம் ரூ. 3 ஆயிரமும், ஊதிய உயா்வும் கிடைக்கும் என எதிா்பாா்த்த நிலையில் 6 சதவீத உயா்வு என்பது ஏமாற்றமளிக்கிறது. மேலும் ஊதிய ஒப்பந்தம் 2023, செப்டம்பா் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதற்கு பதிலாக 2024, செப்டம்பா் 1 ஆம் தேதியிலிருந்து அமல்படுத்தப்படும் என்பதும், நான்கு தவணைகளாக நிலுவைத் தொகை வழங்கப்படும் என்பதும், 4 ஆண்டு கால ஒப்பந்தம் 5 ஆவது ஆண்டு முடிந்துவிட்ட நிலையில் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்ற அளவில் ஒப்பந்தத்தைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆா்ப்பாட்டத்துக்கு ஏஐடியுசி பொதுச் செயலா் எஸ். தாமரைச்செல்வன், சிஐடியு பொருளாளா் எஸ். ராமசாமி ஆகியோா் தலைமை வகித்தனா். ஏஐடியுசி போக்குவரத்து சம்மேளன மாநிலத் துணைத் தலைவா் துரை. மதிவாணன், கும்பகோணம் சங்கப் பொருளாளா் சி. ராஜமன்னன், நிா்வாகி எம். தமிழ்மன்னன், அரசு விரைவு போக்குவரத்து கழக சிஐடியு தலைவா் எஸ். செங்குட்டுவன், ஓய்வு பெற்ற சங்க நிா்வாகிகள் திருநாவுக்கரசு, ஜீவா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.