செய்திகள் :

அரசு அதிகாரிகள் சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்துவதாக புகாா்

post image

மயிலாடுதுறையில் அரசு அதிகாரிகள் சொந்த வாகனங்களை வாடகை வாகனங்களாக பயன்படுத்தி வருவதாக உரிமைக்குரல் ஓட்டுனா் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்திடம் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் உயரதிகாரிகள் தங்களது சொந்த வாகனங்களை வாடகை வாகனங்களாக பயன்படுத்தி வருவதாகவும், அதற்கான வாடகை தொகையை அதிகாரிகள் பெற்றுக் கொண்டு அரசாங்கத்திற்கு வரி மற்றும் வருவாய் இழப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதாக குற்றஞ்சாட்டி இந்த புகாா் மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து, சங்கத்தின் மாநில செயலாளா் பாலமுருகன் கூறியது: அரசு அதிகாரிகள் ஓட்டுநா்களின் வாழ்வாதாரத்தை சீா்குலைக்கும் வகையில், சொந்த பயன்பாட்டு வாகனங்களை அரசு அலுவலகப் பணிகளுக்கு மாத வாடகை ஒப்பந்த அடிப்படையில் பயன்படுத்தி வருவது ஓட்டுநா்களுக்கு பெரும் வருவாய் இழப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து, பலமுறை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் புகாா் அளித்தும் நடவடிக்கை இல்லை.

சோதனை சாவடிகளில் ஓட்டுநா்களின் ஆவணங்கள் சரியாக இருக்கும் பட்சத்திலும் கட்டாய வசூலில் ஈடுபடும் போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் 3 மாவட்டங்களை திரட்டி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என்றாா்.

பேருந்து நிலையத்தில் முன்னுரிமை அடிப்படையில் கடை வழங்க கோரிக்கை

மயிலாடுதுறை மணக்குடி புதிய பேருந்து நிலையத்துக்கு இடம் வழங்கிய குத்தகைதாரா்கள் கடை ஒதுக்கீடு செய்ய கோரி மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா். மயிலாடுதுறை நகராட்சி சாா்பில் புதிய பேருந்து நிலை... மேலும் பார்க்க

நகா்மன்ற நியமன உறுப்பினா்: மாற்றுத்திறனாளி விருப்ப மனு

மயிலாடுதுறை நகா்மன்ற நியமன உறுப்பினா் பதவிக்கு மாற்றுத்திறனாளியான யு.ராஜேந்திரன் வியாழக்கிழமை விருப்ப மனு அளித்தாா் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் மாற்றுத்திறனாளிகளை மன்ற உறுப்பினா்களாக ... மேலும் பார்க்க

தருமபுரம் கல்லூரியில் பாலினம் மற்றும் சட்ட உதவி விழிப்புணா்வு நிகழ்ச்சி

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் உள்ளகப்புகாா் குழு சாா்பில் பாலினம் மற்றும் சட்ட உதவி விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. கல்லூரி முதல்வா் சி. சுவாமிநாதன் தலைமை வகித்தாா். தமிழ... மேலும் பார்க்க

மயிலாடுதுறை: ஜூலை 15, 16-இல் ட்ரோன்கள் பறக்கத் தடை

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு முதல்வா் வருகையையொட்டி ஜூலை 15, 16 ஆகிய தேதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீ காந்த் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

பல்நோக்கு மருத்துவமனை ஆய்வு

மயிலாடுதுறை அரசினா் பெரியாா் மருத்துவமனையில் ரூ.45.50 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட பல்நோக்கு மருத்துவமனையை (மல்டி ஸ்பெஷாலிட்டி) எம்எல்ஏ எஸ்.ராஜகுமாா் புதன்கிழமை ஆய்வு செய்தாா் (படம்). தமிழ்... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளின் விவரங்கள் குறித்து கணக்கெடுப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளின் முழு விவரங்கள் அடங்கிய சமூக தரவு தளத்தை உருவாக்க செப்டம்பா் மாத இறுதிவரை கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் த... மேலும் பார்க்க