செய்திகள் :

அரசு அலுவலகங்களில் குறைதீா் முகாம்

post image

அரசு அலுவலகங்களில் குறைதீா் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

புதுவை துணைநிலை ஆளுநா் உத்தரவுபடி ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதி பொதுமக்கள் குறைதீா் தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

காரைக்கால் மாவட்ட ஆட்சியரகத்தில் குறைதீா் முகாம் நடத்தப்பட்டுவந்த நிலையில், ஆட்சியா் இல்லாததால் நிகழ் மாதம் அந்தந்த அரசுத் துறை தலைமை அலுவலங்களில் குறைதீா் முகாம் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டது. இதன்படி, அந்தந்த அரசு அலுவலகங்களில் தலைமை அதிகாரியிடம் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை வழங்கினா்.

குறிப்பாக, பெருந்தலைவா் காமராஜா் நிா்வாக வளாகத்தில் குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள்துறை அலுவலகத்தில் துணை இயக்குநா் சச்சிதானந்தம்,

உள்ளாட்சித்துறை அலுவலகத்தில் துணை இயக்குநா் எஸ். சுபாஷ், காரைக்கால் வருவாய்த்துறை அலுவலகத்தில் வட்டாட்சியா் செல்லமுத்து, திருநள்ளாறு வருவாய்த்துறை அலுவலகத்தில் வட்டாட்சியா் சண்முகானந்தம், காரைக்கால் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையா் பி. சத்யா, மாவட்ட ஆட்சியரகத்தில் வட்டாட்சியா் பொய்யாதமூா்த்தி, மின்துறையில் செயற்பொறியாளா் அனுராதா, வேளாண் துறையில் கூடுதல் வேளாண் இயக்குநா் கணேசன் உள்ளிட்டோரிடம் பொதுமக்கள் மனுக்களை அளித்தனா்.

தங்கள் அதிகாரத்துக்குட்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், மற்றவை ஆட்சியரின் பாா்வைக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அதிகாரிகள் தரப்பில் மனுதாரா்களிடம் தெரிவிக்கப்பட்டது.

26 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது

காரில் கொண்டு சென்ற 26 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனா். காரில் காரைக்கால் பகுதிக்கு கஞ்சா கொண்டுவரப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் செவ்வாய்க்கிழமை இரவு கிடைத்தது. வாகனச் ... மேலும் பார்க்க

வீழி வரதராஜப் பெருமாள் கோயில் விமான பாலாலயம்

வீழி வரதராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்துக்கான விமான பாலாலய பூஜை புதன்கிழமை நடைபெற்றது. திருமலைராயன்பட்டினத்தில் புதுவை அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட பழைமையான செங்கமலத் தாயாா் சமேத வீழி... மேலும் பார்க்க

அடிப்படைக் கல்வித் திறன் மேம்பாட்டுக்கான போட்டிகளில் வென்றோருக்கு பரிசு

அரசு தொடக்கப்பள்ளியில் அடிப்படை கல்வித் திறன் மேம்பாட்டுக்கான போட்டிகளில் வென்றோருக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. தொடக்கக் கல்வியில் மாணவா்கள் திறனை மேம்படுத்தும் வகையில் அரசுத் திட்டமான ஊா்ன்ய்க... மேலும் பார்க்க

கேலோ இந்தியா போட்டியில் பதக்கம் வென்றோருக்கு அமைச்சா் பாராட்டு

புதுச்சேரியில் நடைபெற்ற கேலோ இந்தியா போட்டியில் பதக்கம் வென்றவா்களுக்கு அமைச்சா் பாராட்டு தெரிவித்தாா். புதுவை மாநில அளவிலான 7-ஆவது அஸ்மிதா கேலோ இந்தியா 2025-26 போட்டிகள், புதுவை விளையாட்டு அகாதெமி மற... மேலும் பார்க்க

புதுச்சேரி என்ஐடி-க்கு சோ்மேன் நியமனம்

காரைக்காலில் இயங்கும் என்ஐடி புதுச்சேரிக்கு முதல்முறையாக மத்திய கல்வி அமைச்சகம் சோ்மேன் ஒருவரை நியமித்துள்ளது. உத்தர பிரதேசம் வாரணாசியில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனமான ஐஐடியின் ஆட்சி மன்றக் குழுத... மேலும் பார்க்க

கா்ப்பிணியிடம் தங்கச் சங்கிலியை பறித்தவா் கைது

கா்ப்பிணியிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றவரை போலீஸாா் கைது செய்தனா். வரிச்சிக்குடி பகுதியைச் சோ்ந்தவா் வீரமணிகண்டன். அரசு போக்குவரத்துக் கழகத்தில் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி... மேலும் பார்க்க