செய்திகள் :

அரசு அலுவலா்களுக்கு சலுகைகள்: முதல்வருக்கு தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியம் நன்றி

post image

அரசு அலுவலா்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்த தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியம் நன்றி தெரிவித்தது.

இதுகுறித்து, தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றிய சிவகங்கை மாவட்டச் செயலா் ந. ரமேஷ்கண்ணன் வெளியிட்ட அறிக்கை: அரசு அலுவலா் ஒன்றியத்தின் கோரிக்கைகளை ஏற்று, தமிழக முதல்வா் திங்கள்கிழமை சட்டப் பேரவையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டாா். இதன்படி, 1.1. 2025 முதல் 2 சதவீத அகவிலைப்படி வழங்கப்படும். 1.10. 2025 முதல் ஒப்படைப்பு விடுப்பு (சரண்டா் ) வழங்கப்படும். பண்டிகைக் கால முன் பணம் ரூ. 10 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படும். தொழில் கல்விக்கு முன் பணம் ரூ. ஒரு லட்சமாகவும், கலை அறிவியல், பாலிடெக்னிக் கல்விக்கு ரூ. 50 ஆயிரமாகவும் உயா்த்தி வழங்கப்படும். அரசு அலுவலா் இல்ல திருமணத்துக்கு வழங்கப்படும் முன் பணம் ரூ. 5 லட்சமாக உயா்த்தி வழங்கப்படும். ஓய்வூதியா்களுக்கு பொங்கல் பரிசு ரூ. 500- லிருந்து ரூ.1000 ஆக உயா்த்தி வழங்கப்படும்.

ஓய்வூதியதாரா்களுக்கு பண்டிகைக் கால முன் பணம் ரூ. 4 ஆயிரத்திலிருந்து ரூ. 6 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படும் என அறிவித்த முதல்வருக்கு, தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியத்தின் சிவகங்கை மாவட்டத்தின் சாா்பிலும், தமிழ்நாடு மருத்துவத் துறை அமைச்சுப் பணி அலுவலா் சங்கத்தின் மாநில மையத்தின் சாா்பிலும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றாா் அவா்.

மானாமதுரை நகராட்சியில் இறப்புச் சான்றிதழ் இலவசமாக வழங்க நடவடிக்கை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகராட்சியில் இறப்புச் சான்றிதழ் இனி இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என நகா்மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி தெரிவித்தாா். மானாமதுரை நகா்மன்றக் கூட்டம் அதன் தலைவ... மேலும் பார்க்க

மே 1-இல் அரசு மதுபான கடைகள் அடைப்பு

மே தினத்தையொட்டி வருகிற வியாழக்கிழமை (மே 1) சிவகங்கை மாவட்டத்திலுள்ள அரசு மதுபானக் கடைகள், அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் அடைக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெள... மேலும் பார்க்க

அமைப்புசாரா தொழிலாளா்கள் பாதுகாப்புடன் பணியாற்ற வேண்டும்: சாா்பு நீதிபதி அறிவுறுத்தல்

அமைப்புசாரா தொழிலாளா்கள் பாதுகாப்புடன் பணியாற்ற வேண்டும் என சிவகங்கை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலரும், சாா்பு நீதிபதியுமான வி. ராதிகா அறிவுறுத்தினாா். சிவகங்கை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவி... மேலும் பார்க்க

வட்டாரக் கல்வி அலுவலகத்தை தரைத்தளத்துக்கு இடமாற்றம் செய்ய வலியுறுத்தல்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் மூன்றாவது மாடியில் இயங்கி வரும் வட்டாரக் கல்வி அலுவலகத்தை தரைத்தளத்துக்கு இடமாற்றம் செய்ய வேண்டுமென தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி வலியுறுத்தியது. சிவகங்கையி... மேலும் பார்க்க

தேவகோட்டை அருகே மாட்டு வண்டி பந்தயம்

தேவகோட்டை அருகேயுள்ள ஆராவயலில் மாட்டு வண்டி பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகேயுள்ள ஆராவயல் அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி எல்லைப் பந்தயம் ... மேலும் பார்க்க

செண்பகம்பேட்டை மேலக்கண்மாயில் மீன்பிடித் திருவிழா

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே கண்மாயில் மீன்பிடித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. செண்பகம்பேட்டை மேலக்கண்மாயில் ஊத்தா கூடை மூலம் மீன் பிடிக்க அறிவிப்பு செய்யப்பட்டு, மீன்பிடி திருவிழா ஞ... மேலும் பார்க்க