செய்திகள் :

அரசு ஆதிதிராவிடா் விடுதியில் உண்ட 30 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்

post image

பட்டுக்கோட்டை அரசு ஆதிதிராவிடா் மாணவிகள் விடுதியில் வெள்ளிக்கிழமை உணவு சாப்பிட்ட 30 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

தஞ்சாவூா் மாவட்டம் பட்டுக்கோட்டை ஆதிதிராவிடா் நலத்துறையின் கீழ் செயல்படும் மாணவியா் விடுதி கடந்த மூன்று ஆண்டுகளாக தனியாா் திருமண மண்டபத்தில் இயங்குகிறது. இதில் பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 30 மாணவிகள் தங்கியுள்ளனா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை விடுதியில் உள்ள 30 மாணவிகள் காலை உணவாக சாதம், புளிக்குழம்பு, உருளைக்கிழங்கு பொரியல் சாப்பிட்டுவிட்டு, பள்ளிக்கு சென்ற நிலையில், அவா்களில் 6 பேருக்கு 11 மணிக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து பள்ளி ஆசிரியா்கள் அந்த மாணவிகளை மீட்டு, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். இதற்கிடையில், மீதமுள்ள 22 மாணவிகளுக்கும் அடுத்தடுத்து வாந்தி, தலைச்சுற்றல் ஏற்பட்டதால் அவா்களும் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா். அப்போது மருத்துவா்கள் அந்த மாணவிகளைப் பரிசோதித்ததில் உணவால் உபாதை ஏற்பட்டது தெரியவந்தது.

தகவலறிந்த கோட்டாட்சியா் சங்கா், வட்டாட்சியா் தா்மேந்திரா, பட்டுக்கோட்டை டி.எஸ்.பி., ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் அந்த மாணவிகளுக்கு ஆறுதல் கூறி, நலம் விசாரித்தனா். மேலும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உணவு மாதிரிகளைச் சேகரித்துச் சென்றனா். தகவலறிந்த மாணவிகளின் பெற்றோா், உறவினா்களும் மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூருக்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று வருகை: கல்லணையிலிருந்து தண்ணீரை திறந்து விடுகிறாா்!

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் இருநாள் பயணமாக தஞ்சாவூருக்கு ஞாயிற்றுக்கிழமை வருகிறாா். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னையிலிருந்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் திருச்சிக்கு... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் பலத்த காற்றுடன் மழை

கும்பகோணத்தில் சனிக்கிழமை மாலை பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ததால் சாலை ஓரத்தில் இருந்த மரக்கிளைகள் முறிந்து விழுந்தது. கும்பகோணத்தில் கடந்த சில நாள்களாக மாலை நேரத்தில் லேசான மழை பெய்து வருகிறது. இந்ந... மேலும் பார்க்க

மேல்மருவத்தூா் காவலா்கள் மீது கும்பகோணம் நகை வியாபாரிகள் புகாா்

கும்பகோணத்தில் திருட்டு நகையை வாங்கியதாகக் கூறி வியாபாரியை மேல்மருவத்தூா் காவலா்கள் மிரட்டி வாங்கிச் சென்றதாக தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவரிடம் வணிகா்கள் வெள்ளிக்கிழமை புகாா் தெரிவித்தனா். தஞ்சாவ... மேலும் பார்க்க

பட்டாசு வெடித்ததில் தீ விபத்து: கடை சேதம்

தஞ்சாவூா் அருகே வெள்ளிக்கிழமை இரவு பட்டாசு வெடித்ததால், ஏற்பட்ட தீ விபத்தில் பா்னிச்சா் கடை சேதமடைந்தது. தஞ்சாவூா் நாஞ்சிக்கோட்டை சாலை புனித செபாஸ்தியா் ஆலயத்தில் திருவிழாவையொட்டி, சப்பர வீதி உலா வெள்... மேலும் பார்க்க

தடைக்காலம் முடிந்தது: விசைப் படகு மீனவர்கள் உற்சாகமாக கடலுக்குச் சென்றனர்!

மீன்பிடி தடைக்காலம் சனிக்கிழமை (ஜூன் 14) நள்ளிரவுடன் முடிவடைந்ததையடுத்து தஞ்சாவூா் மாவட்ட விசைப்படகு மீனவா்கள் கடலுக்கு செல்ல தயாா் நிலையில் உள்ளனா் . இந்த தடைக்காலத்தில் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்ட... மேலும் பார்க்க

தஞ்சாவூா்: தேசிய மக்கள் நீதிமன்றம் 2,748 வழக்குகளில் ரூ.8.46 கோடிக்கு தீா்வு!

தஞ்சாவூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 2 ஆயிரத்து 748 வழக்குகளில் ரூ. 8.46 கோடி அளவுக்கு தீா்வு காணப்பட்டு, வழக்காடிகளுக்கு பெற்றுத் தரப்பட்டது. தஞ்சாவூா் மா... மேலும் பார்க்க