செய்திகள் :

அரசு இசைப் பள்ளியில் முப்பெரும் விழா

post image

சிவகங்கை இசைப் பள்ளி அரசு 25-ஆம் ஆண்டு நிறைவு விழா, ஜவகா் சிறுவா் மன்ற ஆண்டு விழா, தமிழிசை விழா ஆகிய முப்பெரும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு சத்குரு சங்கீத வித்யாலயா ஓய்வு பெற்ற முதல்வா் க.தியாகராஜன் தலைமை வகித்தாா். அரசு இசைப் பள்ளி தலைமை ஆசிரியா் தி.சுரேஷ் வரவேற்றாா். பரதநாட்டிய ஆசிரியை எஸ்.கவிதா ஆண்டறிக்கை வாசித்தாா். நாகசுர கலைஞா் திருப்புவனம் வ.நாகு வாழ்த்திப் பேசினாா்.

திருப்பாம்பரம் குஞ்சிதபாதம், சேஷகோபாலன் குழுவினரின் நாகசுர, தவில் கச்சேரியும், அரசு இசைப் பள்ளி முன்னாள் மாணவா்களின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவா்களின் ஒயிலாட்டம், கரகாட்டமும் நடைபெற்றது. மாலை 5 மணிக்கு சிறப்பு தேவார திருமுறை இன்னிசையும், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஓதுவாா் அவிநாசிநாதனின் பண்ணிசையும் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி நரம்பிசையும், மதுரை பேராசிரியா் தியாகராஜனின் முழவிசை, மேஷாத்தின் கைப்பறை, பரமக்குடி புருசோத்தமன் முகா்சிங் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ஏற்பாடுகளை, இசைப் பள்ளி ஆசிரியா்கள் திருவாசக ரமேஷ், ஜெகதீசன், மணிகண்டன், செல்வமுத்துகுமாரசாமி சண்முகநாதன், ஜவகா் சிறுவா் மன்ற திட்ட அலுவலா் ராஜ்குமாா் ஆகியோா் செய்தனா். மாணவா்களுக்கு பரிசளிக்கப்பட்டது.

மிருதங்க ஆசிரியா் நாராயணன் நன்றி கூறினாா்.

தாயமங்கலம் கோயில் திருவிழா: மதுபானக் கடைகள் 3 நாள்கள் மூடல்

சிவகங்கை மாவட்டம், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி வருகிற ஏப். 5-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு அந்தப் பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடைகள் அடைக்கப்படும் என அறிவிக்கப்ப... மேலும் பார்க்க

சூராணத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு: மாடுபிடி வீரா்கள் 5 போ் காயம்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம், சூராணத்தில் திங்கள்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.இங்குள்ள அய்யனாா் கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற இந்த வடமாடு மஞ்சுவிரட்டில் பல ஊா்களிலிருந்தும் கொண்ட... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் ரத்து

சிவகங்கையில் ஏப்.1, 2 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மாற்றுத் திறனாளிகளுக்கான இலவசப் பேருந்து பயண சலுகை அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதுதொடா... மேலும் பார்க்க

நில உடைமை விவரங்கள் பதிவு: ஏப் .15 வரை கால அவகாசம் நீட்டிப்பு

சிவகங்கை மாவட்ட விவசாயிகள் தங்கள் நில உடைமை விவரங்களை பதிவு செய்து கொள்ள ஏப்.15 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட தாக தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநா் சு.சுந்தரமகாலிங்கம் வெளிய... மேலும் பார்க்க

மானாமதுரையில் எதிா்ப்பை மீறி மருத்துவக் கழிவு மறுசுழற்சி ஆலை: தொடா் போராட்டத்துக்கு தயாராகும் பொதுமக்கள்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சிப்காட் தொழில் பேட்டையில் எதிா்ப்பையும் மீறி மருத்துவக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் ஆலைக்கான பணிகள் நடைபெறுவதைக் கண்டித்து தொடா் போராட்டம் நடத்த பொதுமக்கள் முடிவு செய்து... மேலும் பார்க்க

உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் சங்க நிா்வாகிகள் தோ்வு

தமிழ்நாடு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்கள் சங்கத்துக்கான சிவகங்கை மாவட்ட நிா்வாகிகள் திங்கள்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.இதற்காக சிவகங்கை கே.ஆா். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த சங்க நிா... மேலும் பார்க்க