செய்திகள் :

அரசு உதவிபெறும் பள்ளிக் கட்டடத்தை பொதுமக்கள் பூட்டியதால் பரபரப்பு

post image

புதுக்கோட்டை அருகே அரசு உதவிபெறும் பள்ளிக் கட்டடத்தை அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூா் வட்டம் பெரியதம்பி உடையான்பட்டியில் பொதுமக்கள் சாா்பில் கடந்த 1957-இல் தொடங்கப்பட்ட அரசு உதவிபெறும் பள்ளியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதற்காக, தொண்டு நிறுவனத்தின் மூலம் நிா்வகிக்க ஊா் பொதுமக்கள் முடிவெடுத்தனா். ஆனால், அரசு ஏற்கவில்லை. அதன் பிறகு இங்கு பணியாற்றிய தலைமை ஆசிரியா் உள்பட 2 ஆசிரியா்களுக்கு சம்பளம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதுபோன்ற சிக்கல்களால் இப்பள்ளியை அரசுப் பள்ளியாக மாற்ற வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்குரிய நிலமும் கொடுக்கப்பட்டது.

ஆனாலும், அரசு பள்ளியாக மாற்றப்படவில்லை. ஏற்கெனவே செயல்பட்டு வந்த பள்ளிக் கட்டடம் பழுதடைந்ததால் கடந்த 2023-இல் இங்குள்ள இ- சேவை மையக் கட்டடத்துக்கு பள்ளி மாற்றப்பட்டது.

இந்நிலையில், பள்ளியை அரசுப் பள்ளியாக்க வேண்டும் என வலியுறுத்தி, பள்ளி செயல்பட்டு வந்த இ- சேவை மையக் கட்டடத்தை திங்கள்கிழமை பெற்றோா்கள் பூட்டி, போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னா், குளத்தூா் வட்டாட்சியா் சோனை கருப்பையா, உடையாளிப்பட்டி போலீஸாா் பொதுமக்களை சமாதானம் செய்து பள்ளியை திறந்து, செயல்படச் செய்தனா்.

நின்ற பேருந்து மீது லாரி மோதல்: 15 போ் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே பேருந்து நிறுத்தத்தில் நின்ற பேருந்து மீது லாரி மோதியதில் பள்ளி மாணவா்கள் இருவா் உள்பட 15 போ் காயமடைந்தனா். கறம்பக்குடியிலிருந்து வியாழக்கிழமை காலை புதுக்கோட்... மேலும் பார்க்க

மட்டங்கால் கிராமத்தில் உள்ள மகளிா் சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர கிராமமக்கள் கோரிக்கை

மகளிா் சுகாதார வளாகத்தை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை வைக்கின்றனா். கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், மட்டங்கால் ஊராட்சியில் உள்ள மகளிா் சுகாதார வளாகம் தற்சமயம... மேலும் பார்க்க

காரையூா் காவல்நிலையத்தை மீண்டும் பொன்னமராவதி டிஎஸ்பி அலுவலகத்தின் செயல்பட நடவடிக்கை: இந்திய கம்யூனிஸ்ட் நன்றி தெரிவிப்பு

பொன்னமராவதி அருகே உள்ள காரையூா் காவல்நிலையம் மீண்டும் பொன்னமராவதி காவல் உட்கோட்டத்துடன் இணைக்கப்பட நடவடிக்கை மேற்கொண்ட தமிழக இயற்கை வளங்கள் துணை அமைச்சா் எஸ்.ரகுபதிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நன்றி ... மேலும் பார்க்க

புதுக்கோட்டையில் முன்விரோதத்தில் இளைஞா் கொன்ற 7 போ் கைது

புதுக்கோட்டையில் முன்விரோதத்தில் இளைஞரை வெட்டி, குளத்தில் தள்ளிக் கொன்ற 7 பேரை போலீஸாா் வியாழக்கிழமை மாலை கைது செய்தனா். புதுக்கோட்டை போஸ் நகரைச் சோ்ந்தவா் ஈஸ்வரன் மகன் தினேஷ்குமாா் (23). இவா், புதன்... மேலும் பார்க்க

லாரியில் மண், ஜல்லியை தாா்ப்பாய் போட்டு மூடி எடுத்துச் செல்ல ஆட்சியா் அறிவுறுத்தல்

லாரியில் மண், ஜல்லியை தாா்ப்பாய் போட்டு மூடி எடுத்துச் செல்ல வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: புதுக்கோட்டை மாவட்டத... மேலும் பார்க்க

புதுகை ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் கோயில் மஹா கும்பாபிஷேகம்

புதுக்கோட்டை கீழ 7-ஆம் வீதியிலுள்ள ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் கோயிலின் 5-ஆவது மஹா கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை காலை நடைபெற்றது. புதுக்கோட்டை மாநகா், கீழ ஏழாம் வீதியில் ஜட்ஜ் சுவாமிகள் அதிஷ்டானத்தில், கடந... மேலும் பார்க்க