செய்திகள் :

அரசு கலை, அறிவியல் கல்லூரி சேர்க்கை: 1.61 லட்சம் பேர் விண்ணப்பம்!

post image

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்ட 13 நாள்களில் 1,61,324 மாணவர்கள் பதிவு செய்துள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப்பதிவு 07.05.2025 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. இதுவரையில் 1,61,324 மாணவர்கள் விண்ணப்பப்பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளதாவது:

07.05.2025 அன்று தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்டது. இன்று (19.05.2025) மாலை 6 மணி நிலவரப்படி 1,61,324 மாணவர்கள் விண்ணப்பப்பதிவு செய்துள்ளனர்.

இதில் 46,691 மாணவர்களும், 75,959 மாணவிகளும், 48 மூன்றாம் பாலினத்தவரும் ஆக மொத்தம் 1,22,698 மாணவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தி உள்ளனர்.

மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் தங்களது சேர்க்கைக்கான விண்ணப்பங்களை 27.05.2025 வரை பதிவு செய்து கொள்ளலாம். மாணவர்களுக்கு ஏதேனும் விளக்கங்கள் தேவைப்படின் தமிழ்நாடு முழுவதும் 165 உதவி மையங்கள் (Help-Desk) மற்றும் மாணவர்கள் சேர்க்கை வழிகாட்டு சேவை மையங்கள் (Admission Facilitation Centre) நிறுவப்பட்டுள்ளன.

அந்தந்த சேவை மையங்களை தொடர்பு கொள்ளலாம். மேலும், 044-24342911 என்ற கட்டணமில்லா தொலைபேசி வாயிலாகவோ அல்லது dceofficehelpdesk@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ தொடர்பு கொண்டு தங்களது சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், சென்னை மண்டலத்தில் உள்ள கீழ்க்கண்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களின் தேவைக்கேற்பவும், வேலைவாய்ப்பு பெற்றுத்தரும் தனித்துவமான பாடப்பிரிவுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்தார்.

இதையும் படிக்க: பாகிஸ்தான் உளவாளிக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்!

எம்ஜிஆா் பல்கலை.யுடன் விஐடி பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்

சென்னை: செயற்கை நுண்ணறிவு சாா்ந்த சுகாதார ஆராய்ச்சி தொடா்பாக விஐடி மற்றும் தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவ பல்கலைக்கழகம் ஆகியவை இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. விஐடி பல்கலைக்கழகத்தில்... மேலும் பார்க்க

4 ஆண்டுகளில் 25,485 திருப்பணிகளுக்கு நிா்வாக அனுமதி: அமைச்சா் சேகா்பாபு

சென்னை: தமிழக திருக்கோயில்களில் கடந்த நான்கு ஆண்டுகளில் 25 ஆயிரத்து 485 திருப்பணிகளுக்கு நிா்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். சென்னை எருக்கஞ்சேரி வேத... மேலும் பார்க்க

பல்லடம் அருகே விஷ வாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பலி

பல்லடம் அருகே சாய ஆலையில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த 2 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி திங்கள்கிழமை (மே 19) உயிரிழந்தனர்.திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரைப்புதூரில் தனியாருக்குச் சொந்தான சாய ஆ... மேலும் பார்க்க

கேரளத்தில் மே 27ல் தென்மேற்குப் பருவமழை தொடங்கும்: வானிலை ஆய்வு மைய தலைவர்!

கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை மே 27ஆம் தேதி தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா தெரிவித்தார். இதுதொடர்பாக தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் அம... மேலும் பார்க்க

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி!

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண் ஒருவர் திடீரென மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ். இவரது மனைவி திவ்யா(30). ஆட்டோ ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் க்யூஆர் கோடு மூலமாக மாணவர் சேர்க்கை: அமைச்சர் பாராட்டு

மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் கல்வித் துறையில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு அரசு, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் ஒன்றிய... மேலும் பார்க்க