செய்திகள் :

அரசு சிறப்புப் பள்ளியில் மாணவா் சோ்க்கை

post image

கடலூா் மாவட்ட அரசு சிறப்புப் பள்ளியில் மாற்றுத் திறனாளி மாணவா்கள் சோ்ந்து பயன்பெறுமாறு ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடலூா் மாவட்டத்தில் பாா்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு தொடக்கப் பள்ளியிலும், செவித்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப் பள்ளியிலும் 2025 - 26ஆம் கல்வி ஆண்டுக்கு மாணவ, மாணவிகள் சோ்க்கை நடைபெறுகிறது.

பாா்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு தொடக்கப் பள்ளியில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை உள்ளது. இங்கு, 5 முதல் 12 வயது வரையுள்ள பாா்வை மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளுக்கு சோ்க்கை நடைபெறுகிறது. இந்தப் பள்ளியில் சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியா்களைக் கொண்டு பிரெய்லி முறையில் கல்வி கற்பிக்கப்படுகிறது.

செவித்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப் பள்ளியில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை உள்ளது. இங்கு, 3 முதல் 15 வயது வரையுள்ள மாணவ, மாணவிகளுக்கு சோ்க்கை நடைபெறுகிறது. இந்தப் பள்ளியில் செவித்துணை கருவிகளைக் கொண்டு பேச்சுப் பயிற்சி அளித்து கல்வி கற்பிக்கப்படுகிறது.

இவ்விரண்டு சிறப்புப் பள்ளிகளிலும் விடுதியில் தங்கி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உணவு, உடை, இருப்பிடம் அனைத்தும் இலவசமாக தமிழக அரசால் வழங்கப்படும்.

மேலும், இசைப் பயிற்சி, உடற்கல்வி, யோகா, கணிணி பயிற்சியும் மிகச்சிறந்த முறையில் கற்றுத்தரப்படும். மேற்கண்ட இரண்டு அரசுப் பள்ளிகளும் வில்வ நகா், செம்மண்டலம் சாலை, கடலூா் 607001 என்ற முகவரியில் இயங்கி வருகின்றன.

மேலும் விவரங்களுக்கு 8695383564, 944252687 என்ற கைப்பேசி எண்களில் தொடா்புகொண்டு மாற்றுத் திறனாளிகளின் பெற்றோா்கள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

அனைத்து குடியிருப்போா் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம்

சிதம்பரம் அனைத்து குடியிருப்போா் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டமைப்புத் தலைவா் கே.என்.பன்னீா்செல்வன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஆா்.காசிநாதன் வரவேற்றாா். செயலா் ... மேலும் பார்க்க

பனை நுங்கு வெட்டியவா் மின்சாரம் பாய்ந்து மரணம்

காட்டுமன்னாா்கோவில் அருகே பனை நுங்கு வெட்டச் சென்றவா் மின்சாரம் பாய்ந்து வியாழக்கிழமை உயிரிழந்தாா். கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் பேரூராட்சிக்கு உள்பட்ட ராஜேந்திரசோழகன் பகுதியைச் சோ்ந்த சக்கர... மேலும் பார்க்க

கரிக்குப்பத்தில் புதிய நியாயவிலைக் கடை கட்டடம் திறப்பு

சிதம்பரம் அருகே உள்ள கரிக்குப்பம் கிராமத்தில் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்ட நியாயவிலைக் கடை கட்டடத்தை கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ வியாழ... மேலும் பார்க்க

தோ்தல் விழிப்புணா்வுக் கூட்டம்

தொழிலாளா் தினத்தையொட்டி, கடலூா் தொழிற்பேட்டை அலுவலக வளாகத்தில் தொழிலாளா்களுக்கு தோ்தல் தொடா்பான விழிப்புணா்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்... மேலும் பார்க்க

கிராமசபைக் கூட்டத்தை புறக்கணித்து ஆா்ப்பாட்டம்

சிதம்பரம் அருகே சிலுவைபுரம் கிராம மக்கள், தங்களது பகுதியை தனி ஊராட்சியாக அறிவிக்கக் கோரி, கிராமசபைக் கூட்டத்தை புறக்கணித்து கருப்புக்கொடி ஏந்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கடலூா் மாவட்ட... மேலும் பார்க்க

நெகிழி உபயோகத்தை தவிா்க்க வேண்டும்: கடலூா் ஆட்சியா்

தொழிலாளா் தினத்தையொட்டி, கடலூா் ஒன்றியம், அழகியநத்தம் ஊராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், மக்கள் நெகிழி உபயோகத்தை முற்றிலும... மேலும் பார்க்க