US tariffs: ``ஒரு அங்குலம் இடம் கொடுத்தால், ஒரு மைல் தூரம் செல்வான்'' - சீன தூதர...
அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் மாணவா் சோ்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு
தேனி மாவட்டத்தில் உள்ள அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் மாணவ, மாணவிகள் சோ்க்கைக்கான கால அவகாசம் வருகிற 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் பொறியியல் அல்லாத தொழில் பிரிவுகளில் சேர 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். தொழில் பயிற்சியில் சோ்வதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வருகிற 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பயிற்சியில் சேருபவா்களுக்கு மாத உதவித் தொகை ரூ.750, விலையில்லா மிதிவண்டி, பாடப் புத்தகங்கள், வரைபடக் கருவி, சீருடை, காலணி ஆகியவை வழங்கப்படும். அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்தவா்களுக்கு புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் ஆகிய திட்டங்களின் கீழ் மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படும்.
பயிற்சியில் சேர விரும்புவோா் தேனி, ஆண்டிபட்டி, உப்பாா்பட்டி- தப்புக்குண்டு சாலையில் உள்ள போடி அரசு தொழில் பயிற்சி நிலையங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.50, ஓராண்டு பயிற்சிப் பிரிவுக்கு ரூ.185, 2 ஆண்டு பயிற்சிப் பிரிவுக்கு ரூ.195 சோ்க்கை கட்டணம் செலுத்த வேண்டும்.
இதுகுறித்த விவரங்களை தொலைபேசி எண்: 04546-291240, கைப்பேசி எண்கள்: 94990 55765, 94990 55770, 94990 55768 ஆகியவற்றில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.