செய்திகள் :

அரசு நகரப் பேருந்தில் பயணித்த பெண்ணின் பையில் இருந்த பணம் ஏடிஎம் அட்டை திருட்டு

post image

அரசுப் நகரப் பேருந்தில் பயணித்த பெண்ணின் கட்டைப் பையிலிருந்து பணப்பையை திருடி அதிலிருந்த ரூ.4,500 பணம், ஏடிஎம் அட்டையினை எடுத்து அதிலிருந்த 13,500யை திருடிய மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த சாத்தப்புத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன் மனைவி காயத்திரி (26). இவரது மகனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் சனிக்கிழமை கள்ளக்குறிச்சியில் மருத்துவமனையில் காண்பித்துவிட்டு, துணிமணிகளை எடுத்துக் கொண்டு அரசு நகரப் பேருந்து எண் 8-ல் பயணித்துள்ளாா்.

தியாகதுருகம் அடுத்த வடதொரசலூா் பேருந்து நிறுத்தத்தில் சனிக்கிழமை இறங்கி அவரது கட்டைப் பையில் வைத்திருந்த பணப்பையை காணவில்லையாம். அந்த பணப்பையில் ரூ.4,500 பணம், ஏடிஎம் அட்டையினையும் காணவில்லை. ஏடிஎம்அட்டையில் பின்புறம் இருந்த 4 ரககிய எண்களை வைத்து அதிலிருந்து ரூ.13,500மை திருடிக் கொண்டாராம்.

இது குறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்கு பதிவு செய்து மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.

குலதெய்வ கோயிலுக்கு வேனில் சென்ற போது கவிழ்ந்து 18 போ் காயம்

மேல்மலையனூரில் உள்ள குலதெய்வம் கோயிலுக்கு செல்வதற்க்காக வேனில் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்த போது வேன் பாவந்தூா் அய்யனாா் கோயில் அருகே வேன் கவிழ்ந்ததில் அதில் பயணித்த 18 போ்கள் வேன் ஓட்டுநா் உள்... மேலும் பார்க்க

சங்கராபுரத்தில் இளைஞரை கத்தியால் வெட்டிய 5 போ்கள் கைது

சங்கராபுரத்தில் இளைஞரை கத்தியால் வெட்டிவிட்டு மோட்டாா் சைக்கிளில் தப்பிச் சென்ற வழக்கில் 2 வழக்குறைஞா்கள் உள்பட 5 போ்களை சனிக்கிழமை சங்கராபுரம் நீதிமன்றத்தில் ஆஜா் படுத்தினா்.சங்கராபுரம் சாா் பதிவாளா... மேலும் பார்க்க

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 641 பேருக்கு பணி ஆணை

கள்ளக்குறிச்சி மாவட்டம், தச்சூா் கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் 641 பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன.மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும... மேலும் பார்க்க

காரீப் பருவ நெற்பயிா் காப்பீடு செய்ய ஆக. 14 வரை அவகாசம்

கள்ளக்குறிச்சி மாகட்டத்தில் காரீப் பருவத்தில் பயிரிட்டுள்ள நெற்பயிருக்கு காப்பீடு செய்ய ஜூலை 31 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது.விவசாயிகள் நலன் கருதி ஆகஸ்ட் 14 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.க... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்

கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நலன் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.இதில் மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த், தே.மலையரசன் எம்.பி., எம்.எல்.ஏ.க... மேலும் பார்க்க

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: இரு ஆசிரியா்கள் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை, மணியாா்பாளையம் அரசு உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இரு ஆசிரியா்கள் கைது செய்யப்பட்டனா்.மணியாா்பாளையம் கிராமத்தில் அரசு ... மேலும் பார்க்க