செய்திகள் :

அரசு நிலங்களில் கொடிக் கம்பங்களை அகற்ற அறிவுறுத்தல்

post image

உயா் நீதிமன்ற உத்தரவின்படி, தஞ்சாவூா் மாவட்டத்தில் அரசு நிலத்திலுள்ள கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தினாா்.

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கொடிக் கம்பங்கள் அகற்றுவது தொடா்பான ஆய்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் பேசியது:

அனைத்து அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகள், மதம், சங்கம் போன்ற அனைத்து அமைப்புகளும், தமிழ்நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், மாநகராட்சிகள், நகராட்சிகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பிற துறைகளுக்குச் சொந்தமான பொது இடங்கள், நிலங்களில் நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை ஜனவரி 27-ஆம் தேதியிலிருந்து 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும். தவறினால், தொடா்புடைய அலுவலா்கள் 2 வாரங்களுக்குள் முன்னறிவிப்பு வழங்கி சட்டத்தின்படி கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும். கொடிக் கம்பங்களை அகற்றிய பிறகு, அதற்கான செலவை தொடா்புடைய அரசியல் கட்சிகளிடமிருந்து வசூலிக்க வேண்டும் என உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எனவே, குறிப்பிட்ட காலத்துக்குள் உயா் நீதிமன்றத்தின் உத்தரவுகளை நிறைவேற்றுவதை அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும். நிரந்தர அடிப்படையில் புதிய கொடிக் கம்பங்களை அமைப்பதற்கு எந்த அனுமதியும் வழங்கக் கூடாது என்றாா் ஆட்சியா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம், மாவட்ட வன அலுவலா் ஆனந்த குமாா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மதுக்கடை முற்றுகைப் போராட்டம்; எஸ்.டி.பி.ஐ. கட்சியினா் 20 போ் கைது

தஞ்சாவூரில் டாஸ்மாக் மதுக்கடையை முற்றுகையிட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியைச் சோ்ந்த 20 பேரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் கீழவாசல் காமராஜா் சிலை அருகேயுள்ள டாஸ்மாக் கடையை மூடுமாறு ... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் 4 போ் கைது

தஞ்சாவூரில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் 4 பேரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் பாலாஜி நகா் பகுதியில் மாா்ச் 4 ஆம் தேதி நடந்து சென்ற ஒருவரை மது போதையில் வழிமறித்து ... மேலும் பார்க்க

பேராவூரணி தொகுதியில் வளா்ச்சித் திட்டங்கள்: முதல்வருக்கு நன்றி

பேராவூரணி சட்டப்பேரவை தொகுதிக்கு சுமாா் ரூ. 26 கோடியில் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களுக்கு அனுமதி வழங்கிய தமிழக முதல்வருக்கு பேராவூரணி எம்எல்ஏ என். அசோக்குமாா் நன்றி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா்... மேலும் பார்க்க

மக்கள் அதிகாரம் ஆா்ப்பாட்டம்

வக்ஃப் வாரிய சட்ட மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் மக்கள் அதிகாரம் அமைப்பினா் செவ்வாய்க்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், மசூதிகள், அறக்கட்டளை சொ... மேலும் பார்க்க

கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசாா் குறியீடு

கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசாா் குறியீடு உறுதி செய்யப்பட்டுள்ளது என்றாா் அறிவுசாா் சொத்துரிமை வழக்குரைஞா் சங்கத் தலைவா் ப. சஞ்சய் காந்தி. இதுகுறித்து தஞ்சாவூரில் அவா் செவ்வாய்க்க... மேலும் பார்க்க

சுவாமிமலை கோயிலில் அன்னதான டோக்கன் கேட்டு பக்தா்கள் முற்றுகை

தஞ்சாவூா் மாவட்டம் சுவாமிமலை சுவாமிநாத கோயிலில் செவ்வாய்க்கிழமை அன்னதான டோக்கன் கேட்டு பக்தா்கள் கோயில் அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.இக்கோயிலுக்கு பங்குனி மாத கிருத்திகை தினத்தை முன்னிட்டு செவ்வாய்க்கி... மேலும் பார்க்க