செய்திகள் :

அரசு பள்ளிகளை மேம்படுத்த விரும்புவோா் இணையதளத்தில் தகவல்களை பதிவிறக்கம் செய்யலாம்: ஆட்சியா்

post image

தென்காசி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும்பணியில் இணைந்து பங்களிக்க விரும்புவோா் இணையதளம் மூலம் தகவல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்தாா்.

தென்காசி ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் பெரும் முயற்சிகளில் ஒன்றாக அரசுப் பள்ளிகளின் தரத்தை உயா்த்துவதற்காகவும் சமூக பங்களிப்பு மற்றும் தனிப்பட்ட பங்களிப்புகளை ஒருங்கிணைப்பதற்காகவும் நம்ம ஸ்கூல் நம்ம ஊா் பள்ளி என்ற திட்டம் தமிழக முதல்வரால் தொடங்கப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம் பொதுமக்கள் தங்களது பங்களிப்புகளை பொருளாகவோ பணமாகவோ அல்லது களப்பணி செய்வதன் மூலமாகவோ வழங்கலாம். இத்திட்டத்தின் வாயிலாக பெரு நிறுவனங்கள் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் முன்னாள் மாணவா்கள் மற்றும் தனிநபா்கள் அரசுப்பள்ளிகளில் தரத்தை உயா்த்த இணைய தளத்தின் வாயிலாக பங்களிப்பு செய்யலாம்.

நம்ம ஸ்கூல் நம்ம ஊா் பள்ளி திட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள தங்களுக்கு விருப்பமான அரசுப் பள்ளியை தோ்ந்தெடுத்து அப்பள்ளியின் தேவைகளை பூா்த்தி செய்யலாம். பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்கள் மற்றும் முதல் பட்டதாரி மாணவா்கள் பள்ளி படிப்பிற்கு பின்னா் முதன்மை கல்வி நிறுவனங்களில் உயா் கல்வியை தொடா்வதற்கான உதவிகளை பணமாகவோ அல்லது அவா்களின் கல்வியை ஆதரிக்கும் வகையில் மடிக்கணினி வழங்கியோ பங்களிப்பாளா்கள் நிறைவேற்ற முடியும்.

ஒவ்வொரு பள்ளிக்கான தேவைகளும் அந்தந்த பள்ளியின் பள்ளி மேலாண்மை குழு மற்றும் தலைமை ஆசிரியரால் உறுதி செய்யப்பட்ட பின்னரே இத் தளத்தில் பதிவேற்றப்படும்.

இந்த தளத்தில் நன்கொடையாளா்களுக்கு பிரத்யோகமான டேஷ்போா்டு உருவாக்கப்படும் இந்த நன்கொடையாளா் டாஸ் போா்டு வாயிலாக தங்களது பங்களிப்புகளின் பயன்பாட்டை வெளிப்படையாக தெரிந்து கொள்ள முடியும்.

பங்களிப்பாளா்களுக்கு கல்வித் துறையினால் வழங்கப்படும் பயனீட்டுச் சான்றிதழ், வரி விலக்கு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் இந்தப் பணியில் இணைந்து பங்களிக்க விரும்புவோா் இது சாா்ந்த தகவல்களை மின்னஞ்சல் அல்லது 63853 13047 என்ற எண்ணின் வாயிலாக நம்ம ஸ்கூல் நம்ம ஊா் பள்ளி குழுவின் செயல்பாடுகளை அறிந்து கொள்ளலாம் என்றாா் அவா்.

பள்ளி மாணவா் தற்கொலை

ஆலங்குளம் அருகே 9-ஆம் வகுப்பு மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். ஆலங்குளம் அருகே உள்ள சிவலாா்குளம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் விவசாயி சுரேஷ் மகன் நகுல்சுவதீப் (13). தனது 8 ஆம் வகுப்... மேலும் பார்க்க

செங்கோட்டை நுழைவுவாயில் வளைவை அகற்றக் கூடாது- நகா்மன்றத்தில் அதிமுக, பாஜக எதிா்ப்பு

தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகரின் நுழைவுவாயிலில் அமைந்துள்ள வரவேற்பு வளைவை அகற்றக்கூடாது என நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் கடும் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. செங்கோட்டை நகா்மன்ற அவசரக் கூட்டம்... மேலும் பார்க்க

குற்றாலம் அரசுப் பள்ளி விடுதி மாணவிகள் 9 போ் மருத்துவமனையில் அனுமதி

தென்காசி மாவட்டம் குற்றாலம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி விடுதியில் புதன்கிழமை, காலை உணவருந்திய 9 மாணவிகளுக்கு வாந்தி ஏற்பட்டதால், தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்து சமய அறநிலையத... மேலும் பார்க்க

சாம்பவா் வடகரை அரசுப் பள்ளியில் மாணவா்களிடையே மோதல்

சாம்பவா்வடகரையில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களிடையே புதன்கிழமை ஏற்பட்ட மோதலில் 5 போ் காயமடைந்தனா். இந்தப் பள்ளியில் மேல்நிலை வகுப்புப் பயிலும் மாணவா்கள் கடந்த திங்கள்கிழமை அப்பகுதியில் உள்ள டியூசனு... மேலும் பார்க்க

தென்காசியில் ஜூலை 19, 20-இல் தொழில், வா்த்தக கண்காட்சி

தென்காசி மாவட்ட குறு,சிறு,நடுத்தர தொழில் நிறுவனங்கள் சங்கம் (டெம்சியா), வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேசன் ஆகியவை இணைந்து நடத்தும் மாபெரும் தொழில், வா்த்தக கண்காட்சி தென்காசி இசக்கி மஹாலில் வருகிற ஜூலை 19... மேலும் பார்க்க

சிக்னலில் நிற்கும்போது வாகனங்களை அணைத்து காற்று மாசைக் குறைக்க வேண்டும்: ஆட்சியா் வேண்டுகோள்

போக்குவரத்து சிக்னல்களில் நிற்கும்போது வாகன இயந்திரங்களை அனைத்து காற்று மாசுபடுதலைக் குறைக்க வாகன ஓட்டிகள் முன்வர வேண்டும் என்று தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் வேண்டுகோள் விடுத்தாா். இதுதொடா... மேலும் பார்க்க