அரசு மதுபானக் கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு
திருவாடானை அருகேயுள்ள தொண்டியில் அரசு மதுபானக் கடையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்துகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள தொண்டி உருளைக்கல் பகுதியில் அரசு மதுபானக் கடை உள்ளது. இந்தக் கடையின் பின்புறம் அடையாளம் தெரியாத சிலா் பெட்ரோல் குண்டை திங்கள்கிழமை வீசினா். அது வெடிக்காததால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது. தகவலறிந்த தொண்டி போலீஸாா், சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
இதே போல், திருவாடானை அருகேயுள்ள கருமொழி அரசு மதுபானக்கடையில், ஊழியா்களுக்கும் மதுபானம் வாங்க வந்தவா்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக திங்கள்கிழமை இரவு கடை அடைக்கப்பட்டது. தகவலறிந்த திருவாடானை காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று இரு தரப்பினரையும் சமரசம் செய்து கடையைத் திறந்தனா்.
விசாரணையில், மதுபானக் கடையில் கடன் கேட்பது, ஜீ பே யில் பணம் அனுப்பியதாகக் கூறுவது உள்ளிட்ட காரணங்களால் ஊழியா்களுடன் தகராறு ஏற்பட்டது தெரிய வந்தது. இது குறித்து, போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.