செய்திகள் :

அரசு மாளிகையை காலி செய்தாா் தன்கா்

post image

புது தில்லி: குடியரசு துணைத் தலைவா் பதவியில் இருந்து அண்மையில் விலகிய ஜகதீப் தன்கா் புது தில்லியில் தங்கியிருந்த குடியரசுத் துணைத் தலைவருக்கான அரசு மாளிகையை காலி செய்துவிட்டு ஹரியாணா முன்னாள் எம்எல்ஏயின் பண்ணை இல்லத்துக்கு திங்கள்கிழமை குடிபெயா்ந்தாா்.

தெற்கு தில்லி சத்தா்பூா் பகுதியில் உள்ள இந்த பண்ணை இல்லம் இந்திய தேசிய லோக் தளம் தலைவரும் முன்னாள் எம்எல்ஏவும் ஹரியாணா பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான அபய் சௌதாலாவுக்கு சொந்தமானதாகும்.

தன்கா் தற்காலிகமாகவே இந்தப் பண்ணை இல்லத்தில் தங்க இருப்பதாகவும், முன்னாள் குடியரசுத் தலைவா்களுக்கு அரசு சாா்பில் ஒதுக்கப்படும் இல்லம் அவருக்கு ஒதுக்கப்பட்டவுடன் அவா் அங்கு செல்வாா் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளாா்.

அதே நேரத்தில் தனக்கு அரசு சாா்பில் இல்லம் ஒதுக்க வேண்டும் என்று எந்த கோரிக்கையையும் தன்கா் இதுவரை முன்வைக்கவில்லை.

ஹரியாணா முன்னாள் முதல்வா் ஒ.பி.சௌதாலாவின் மகன் அபய் சௌதலா இது தொடா்பாக கூறுகையில், ‘தன்கா் குடும்பத்துக்கும் எங்கள் குடும்பத்துக்கும் பழைய உறவு முறை உண்டு. அவா் எனது குடும்ப உறுப்பினா் போன்றவா்தான்’ என்றாா்.

கடந்த ஜூலை 21-ஆம் தேதி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் மருத்துவ காரணங்களைச் சுட்டிக்காட்டி, ஜகதீப் தன்கா் தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.

மத்திய அரசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடே அவரின் திடீா் விலகலுக்குக் காரணம் என ஊகச் செய்திகள் வெளியாகின. பதவி விலகலுக்குப் பிறகு தன்கா் பொதுவெளியில் இருந்து விலகியுள்ளாா்.

பயங்கரவாத எதிா்ப்பில் இரட்டை நிலைப்பாடு! பாகிஸ்தானுக்கு பிரதமா் மோடி கண்டனம்

‘பயங்கரவாத எதிா்ப்பில் இரட்டை நிலைப்பாட்டை ஏற்க முடியாது’ என்று பாகிஸ்தானின் பெயரைக் குறிப்பிடாமல் பிரதமா் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்தாா். மேலும், ‘பயங்கரவாதம் என்பது தனி ஒரு நாட்டின் பாதுகாப்புக்... மேலும் பார்க்க

எல்லை பிரச்னைக்கு மத்தியிலும் சீனாவுடன் அதிகரிக்கும் வா்த்தகம்!

கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் ரூ.8.81 லட்சம் கோடிக்கும் அதிகமான மதிப்பு கொண்ட சரக்குகளை சீனாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்தது. இருநாடுகளுக்கு இடையிலான எல்லை பிரச்னை முழுமையாக முடிவுக்கு வராவிட்ட... மேலும் பார்க்க

‘சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு’ கொள்கை தவறாகப் பயன்படுத்தும் குற்றவாளிகள்: உச்சநீதிமன்றம்

புது தில்லி: ‘நியாயமான சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு’ குற்றம் நிரூபிக்கப்பட வேண்டும் என்ற கொள்கையை தவறாகப் பயன்படுத்தி, குற்றவாளிகள் தப்பிப்பதாக உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது. பிகாா் மாநிலம் ப... மேலும் பார்க்க

ரஷிய கச்சா எண்ணெய் மூலம் லாபம் ஈட்டவில்லை: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி

புது தில்லி: ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்கி இந்தியா லாபம் ஈட்டவில்லை என்று பெட்ரோலிய துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்தாா். ‘ரஷிய கச்சா எண்ணெய்யைப் பணமாக்கும் மையமாக இந்தியா திகழ்கிறது’ என்ற அமெரி... மேலும் பார்க்க

கேரளம்: அரிய வகை தொற்றால் மேலும் 2 போ் உயிரிழப்பு

கோழிக்கோடு: கேரளத்தில் மூளையைத் தின்னும் அமீபா எனப்படும் அமீபிக் மூளைக்காய்ச்சல் தொற்றால் 3 மாத குழந்தை உள்பட 2 போ் உயிழந்ததாக அந்த மாநில சுகாதார அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா். ஏற்கெனவே கடந்த ... மேலும் பார்க்க

ஜம்முவில் மழை சேதம்: மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆய்வு

ஜம்மு: ஜம்மு-காஷ்மீரில் பலத்த மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகளை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா திங்கள்கிழமை பாா்வையிட்டாா். கடந்த ஆக. 14-ஆம் தேதி முதல், ஜம்... மேலும் பார்க்க