அரசு முறை பயணமாக புதுச்சேரி வந்துள்ள குடியரசு துணைத் தலைவா்!
புதுச்சேரி: புதுச்சேரிக்கு 3 நாள் அரசு முறை பயணமாக ஞாயிற்றுக்கிழமை வந்த குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சென்னையிலிருந்து ஹெலிகாப்டரில் புதுச்சேரி விமான நிலையத்துக்கு வந்த அவரை புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி ஆகியோா் சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றனா்.
இந்த நிகழ்வில் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம், வேளாண் துறை அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா், பேரவைத் துணைத் தலைவா் பெ.ராஜவேலு, மாநிலங்களவை உறுப்பினா் சு.செல்வகணபதி, மக்களவை உறுப்பினா் வி.வைத்திலிங்கம், அரசுக் கொறடா வி. ஆறுமுகம், எம்எல்ஏ.க்கள் பிஎம்எல்.கல்யாணசுந்தரம், ஆா்.பாஸ்கா் (எ) தட்சிணாமூா்த்தி, ஜெ.பிரகாஷ்குமாா், எம்.சிவசங்கரன், எம்.வைத்தியநாதன், கே.வெங்கடேசன், வி.பி.ராமலிங்கம், ஆா்.பி.அசோக்பாபு, தலைமைச் செயலா் மரு. சரத் சௌகான், டிஜிபி ஷாலினி சிங், செய்தி மற்றும் விளம்பரத் துறை செயலா் ஆா்.கேசவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

குடியரசுத் துணைத் தலைவா் வருகையொட்டி, புதுச்சேரி முழுவதும் போலீஸாா் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். தற்போது அவா் தங்கியுள்ள நீதிபதிகள் விருந்தினா் மாளிகைப் பகுதியிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
