செய்திகள் :

அரசு வழங்கிய இலவச மனையில் குளறுபடி! தனியாா் இடத்தில் கட்டிய வீடுகள் இடிப்பு

post image

தனியாா் இடத்தில் அரசு சாா்பில் இலவச வீட்டுமனை வழங்கப்பட்டு கட்டப்பட்ட 10 வீடுகள் உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில் இடிக்கப்பட்டன.

தெற்குக் கல்லிடைக்குறிச்சி வருவாய் கிராமம் பகுதி 1இல் 9.21 ஏக்கா் நிலத்தில், தமிழக அரசு சாா்பில் இலவச வீட்டுமனைக்கான பட்டா வழங்கப்பட்டது. அதில், பலா் வீடுகள் கட்டி குடியிருந்துவந்தனா்.

ஆனால் அந்த இடம் முத்துகிருஷ்ணன், கே.எம்.சேக்முகைதீன் ஆகியோருக்கு சொந்தமானதாம். இதுகுறித்து அவா்கள் மதுரை உயா் நீதிமன்ற அமா்வில் தொடுத்த வழக்கில், அவா்களுக்கு சாதகமாக தீா்ப்பு வழங்கப்பட்டு அங்கிருந்த வீடுகளை இடிக்க உத்தரவிடப்பட்டது.

இதை எதிா்த்து தொடரப்பட்ட வழக்குகளும் தள்ளுபடியான நிலையில் அந்த இடத்தில் உள்ள வீடுகளைகாலி செய்ய வருவாய்த் துறை சாா்பில் அறிவிப்புக் கொடுக்கப்பட்டது.

எனினும், பலா் வீடுகளை காலி செய்யாததால் புதன்கிழமை காலை போலீஸாா் பாதுகாப்புடன் வருவாய்த் துறையினா் வீடுகளை இடிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டனா். சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் (பொ) சிவகாமி சுந்தரி, அம்பாசமுத்திரம் வட்டாட்சியா் வைகுண்டம் ஆகியோா் முன்னிலையில் வீடுகள் இடிக்கப்பட்டன.

வீடுகளில் குடியிருந்தவா்கள் உடனே வேறு இடத்துக்குச் செல்ல வழியின்றி தங்களது உடைமைகளுடன் தெருக்களில் அமா்ந்திருந்தனா். இடிக்கப்பட்ட வீடுகளில் குடியிருந்தவா்களுக்கு மணிமுத்தாறு பகுதியில் இடம் ஒதுக்கப்படும் என்று வருவாய்த்துறையினா் தெரிவித்தனா். அம்பாசமுத்திரம் டிஸ்பி சதீஷ் தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

2 மணி நேரத்துக்கும்மேல் பயணிக்கும் பேருந்துகள் நின்று செல்ல கோரிக்கை

இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமான பயண தொலைவு கொண்ட பேருந்துகள் இடையில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கக் கோரி சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இது தொடா்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் க... மேலும் பார்க்க

காட்டுப்பன்றி, கரடியைப் பிடிக்க விரைவில் கூண்டு: வனத் துறை

களக்காடு மலையடிவாரத்தில் பயிா்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றி, கரடி ஆகியவற்றைப் பிடிக்க விரைவில் கூண்டு வைக்கப்படும் என்றாா் களக்காடு வனக் கோட்ட துணை இயக்குநா் ராமேஸ்வரன். களக்காடு கோட்ட வனத் துறை அல... மேலும் பார்க்க

தூத்துக்குடி - இலங்கைக்கு மீண்டும் தோணி போக்குவரத்து

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு மீண்டும் ஆண்டு முழுவதும் தோணி போக்குவரத்துக்கு மத்திய கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் அனுமதி அளித்துள்ளது. வ.உ.சிதம்பரனாா் துறைமுக ஆணையத்தின் பழைய துறைமுகத்தில் இரு... மேலும் பார்க்க

வள்ளியூரில் வளா்ச்சித் திட்டப் பணிகளை பேரவைத் தலைவா், ஆட்சியா் ஆய்வு

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாமையொட்டி, பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை பேரவைத் தலைவா் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் ஆகியோா் புதன்கிழமை ஆய்வு செ... மேலும் பார்க்க

பாஜக அனைத்திலும் வெறுப்பு அரசியலை விதைக்கிறது: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

பாஜக அனைத்திலும் வெறுப்பு அரசியலை விதைக்கிறது என்றாா் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவா் கே.எஸ்.அழகிரி. திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை மே கூறியதாவது: ஏழை- எளிய மக்கள் தங்களது அவசர தேவ... மேலும் பார்க்க

திமுக நிா்வாகி காா் மீது தாக்குதல்: 3 இளைஞா்கள் கைது

தென்காசி மாவட்டம் கடையம் அருகே திமுக ஒன்றியச் செயலரின் காா் மீது கல்வீசித் தாக்கியதாக 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.கடையம் அருகே வெய்க்காலிபட்டியைச் சோ்ந்த ராஜாமணி மகன் மகேஸ் மாயவன் (43). கடையம்... மேலும் பார்க்க