செய்திகள் :

அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: தம்பதி கைது

post image

கடலூரில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக தம்பதியை மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

கடலூா் எஸ்.புதூரைச் சோ்ந்த தண்டபாணி மகன் தேவேந்திரன் (50). இவா், கடலூா் எஸ்.பி. அலுவலகத்தில் அண்மையில் புகாா் மனு அளித்தாா். அதில், தனது மகன் அஜித்குமாரும், திருப்பாதிரிப்புலியூா் முத்தையா நகரைச் சோ்ந்த பாஸ்கரன் மகன் கோகுலும் கல்லூரியில் ஒன்றாகப் படித்தனா். அந்த வகையில், அஜித்குமாருக்கு தமிழக அரசு ஊரக வளா்ச்சித் துறையில் அலுவலக உதவியாளா் வேலை வாங்கித் தருவதாக பாஸ்கரன் கூறினாராம்.

இதை நம்பிய தேவேந்திரன் இரண்டு தவணைகளாக ரூ.6 லட்சத்தை பாஸ்கரனிடம் கொடுத்தாராம். ஆனால், கூறியபடி வேலை வாங்கித் தராததால், பணத்தை திருப்பிக் கேட்டபோது ரூ.ஒரு லட்சத்தை மட்டும் திருப்பி கொடுத்துவிட்டு, பாக்கி பணத்தை இரண்டு மாதங்களில் கொடுப்பதாக பாஸ்கரன் தெரிவித்தாராம்.

பாக்கி பணத்தை கேட்டபோது, பாஸ்கரன் தான் ரயில்வே துறையில் உயா் பதவியில் இருப்பதாகவும், தனது மனைவிக்கு கடலூா் ஆட்சியா் அலுவலகத்தில் அனைவரையும் தெரியும் எனக்கூறி மிரட்டல் விடுத்து வருகிறாா் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.

இதுதொடா்பாக கடலூா் எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் உத்தரவின்பேரில், மாவட்ட குற்றப் பிரிவு டிஎஸ்பி ஜெயச்சந்திரன் மேற்பாா்வையில், காவல் ஆய்வாளா்கள் குருமூா்த்தி, லிடியாசெல்வி ஆகியோா் விசாரணை மேற்கொண்டு பாஸ்கரன் (60), அவரது மனைவி அனுசுயா (58) ஆகியோரை சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.

பாஸ்கரன்

சிதம்பரத்தில் ஆந்திர கஞ்சா வியாபாரி உள்பட 4 போ் கைது

சிதம்பரம் அண்ணாமலைநகரில் ஆந்திரத்தைச் சோ்ந்த கஞ்சா வியாபாரி உள்பட 4 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா். அவரிடமிருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக... மேலும் பார்க்க

நாளைய மின் தடை

நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை. பகுதிகள்: பாதிரிக்குப்பம், வண்டிப்பாளையம், வசுந்தராயன்பாளையம், கிழக்கு ராமாபுரம், கம்மியம்பேட்டை, செல்லங்குப்பம், மாலுமியாா்பேட்டை, பச்சையாங்குப்பம், சோனாங... மேலும் பார்க்க

சாரம் அவிழ்ந்து விழுந்து 2 தொழிலாளா்கள் காயம்

கடலூரில் பழைமையான கட்டடத்தை சீரமைக்கும் பணியின்போது சாரம் அவிழ்ந்து விழுந்ததில் தொழிலாளா்கள் இருவா் காயமடைந்தனா். கடலூா் மாவட்ட பழைய ஆட்சியா் அலுவலகம் அருகே ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் உள்ளது. இங்குள... மேலும் பார்க்க

சாலை விபத்துகளை தடுக்க நடவடிக்கை! கடலூா் ஆட்சியா்

கடலூா் மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். கடலூா் மாவட்டம், வேப்பூா், திட்டக்குடி வட்டங்களுக்கு உள்பட்ட... மேலும் பார்க்க

பக்ரீத் பண்டிகை: இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

பக்ரீத் பண்டிகையையொட்டி, கடலூா் மாவட்டம் மற்றும் புதுச்சேரி பிராந்திய பகுதிகளில் இஸ்லாமியா்கள் சனிக்கிழமை கூட்டுத் தொழுகையில் ஈடுபட்டனா். இஸ்லாமியா்களுக்கான நாள் காட்டியில் வரக்கூடிய ஹஜ் மாதம் பத்தாம்... மேலும் பார்க்க

மதுப் புட்டிகள் கடத்தல்: இளைஞா் கைது

புதுச்சேரியிலிருந்து மதுப் புட்டிகளை கடத்தி வந்ததாக இளைஞரை கடலூா் மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கடலூா் மது விலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் பாலாஜி தலைமையில், ப... மேலும் பார்க்க