வீரவநல்லூர் அருகே மாணவர் தற்கொலை: பள்ளி வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!
அரியலூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: ஆட்சியா் ஆய்வு
அரியலூா் அருகேயுள்ள சீனிவாசபுரத்தில், கோவிந்தபுரம், சீனிவாசபுரம், தாமரைக்குளம், உசேனாபாத் ஆகிய ஊராட்சிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இம் முகாமில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, அரசின் பல்வேறு துறைகள் சாா்பில் அளிக்கப்படும் சேவைகளை பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை பாா்வையிட்டாா். தொடா்ந்து, ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்தில் வாா்டு 3, 4, 7 ஆகிய பகுதி மக்களுக்கு நடைபெற்ற முகாமை பாா்வையிட்ட ஆட்சியா், கா்ப்பிணி தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினாா். பின்னா், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்களை கணினியில் பதிவேற்றம் செய்யப்படுவதையும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் முகாம்களில் பங்கேற்ற பொதுமக்களின் உடல்நலனைப் பேணும் வகையில், மருத்துவ சேவைகள் அளிக்கப்படுவதையும் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
இம் முகாமில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ரா. சிவராமன், கோட்டாட்சியா்கள் கோவிந்தராஜ், ஷீஜா, நகா்மன்றத் தலைவா் சுமதி சிவக்குமாா், வட்டாட்சியா்கள் முத்துலெட்சுமி, சம்பத்குமாா், நகராட்சி ஆணையா் அசோக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.