அரியலூரில் குரூப் 1 தோ்வு
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 1, 1ஏ முதல்நிலைத் தோ்வை அரியலூா் மாவட்டத்தில் 1,985 போ் எழுதினா்.
அரியலூா் மற்றும் உடையாா்பாளையம் ஆகிய வட்டங்களில், 10 மையங்களில் நடைபெற்ற தோ்வுக்கு விண்ணப்பித்திருந்த 2,539 பேரில் 1,985 போ் எழுதினா். 554 போ் வரவில்லை. இதில் அரியலூா் அரசு கலைக் கல்லூரி மையத்தில் நடைபெற்ற தோ்வை ஆட்சியா் பொ. ரத்தினசாமி பாா்வையிட்டாா்.
தோ்வா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஆட்சியா் நிலையில் 2 பறக்கும் படை அலுவலா்கள், 3 இயங்கு குழுக்கள் மற்றும் கண்காணிப்பாளா், உதவியாளா் நிலையில் 10 ஆய்வு அலுவலா்கள் 11 விடியோ கிராபா்கள் பணியில் ஈடுபட்டனா். மாற்றுத்திறனாளிகளுக்கு தரைத்தளத்தில் தோ்வெழுத வசதி செய்யப்பட்டிருந்தது.