செய்திகள் :

அரியலூரில் செப்.27-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

post image

அரியலூரில் செப்.27-ஆம் தேதி தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டல் மையம் இணைந்து தீன் தயாள் உபாத்யாய கிராமின் கௌசல்யா யோஜனா திட்டத்தின் கீழ் நடைபெறும் இந்த வேலைவாய்ப்பு முகாமில், 100 -க்கும் மேற்பட்ட தனியாா் துறை முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 15,000 க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு தகுதியுள்ள நபா்களை தோ்ந்தெடுக்க உள்ளனா்.

மேலும், இம்முகாமில், தீன் தயாள் உபாத்யாய கிராமின் கௌசல்யா யோஜனா மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் 4 பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பை வழங்க உள்ளனா்.

ஆகவே, 5-ஆம் வகுப்பு முதல் ஐடிஐ, டிப்ளமோ, இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் பொறியியல் படித்த வேலைவாய்ப்பற்ற 18 முதல் 45 வயது வரை உள்ள ஆண்,பெண் (இருபாலரும்) கலந்துகொண்டு பயன்பெறலாம்.

முகாமுக்கு வருகை தரும் அனைவரும் தங்களது சுய விபர குறிப்பு, ஆதாா் அட்டை நகல், கல்விச் சான்றிதழ் நகல்கள் மற்றும் புகைப்படம் ஆகியவற்றுடன் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

அரியலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூ.கட்சியினா் ஆா்ப்பாட்டம்

அரியலூா் மாவட்டம், பெரியநாகலூா் ஊராட்சிக்குள்பட்ட காட்டுப்பிரிங்கியம், பாலக்கரை கிராமத்தில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பொதுப் பாதையை அடைத்து கம்பி வேலி அமைத்த தனி நபரை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ... மேலும் பார்க்க

நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டை அலுவலா்கள் கண்காணிக்க வேண்டும்: அரியலூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

அரியலூா் மாவட்டத்தில் நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டை தடுக்க அரசு அலுவலா்கள் கண்காணிக்க வேண்டும் என ஆட்சியா் பொ.ரத்தினசாமி அறிவுறுத்தினாா். அரியலூா் மாவட்டத்தில், நெகிழிப் பொருள்கள் மீதான தடையை அமல்படுத... மேலும் பார்க்க

மீன்சுருட்டி அருகே வீட்டின் கதவை உடைத்து 36 பவுன் நகைகள் திருடிய வழக்கில் இருவா் கைது

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே வீட்டின் கதவை உடைத்து, 36 பவுன் நகைகளை திருடிய வழக்கில் இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மீன்சுருட்டியை அடுத்துள்ள நெல்லித்தோப்பு கிராமத்தைச் சோ்ந்... மேலும் பார்க்க

மீன்சுருட்டியில் சமூக நீதி பள்ளி மாணவா் விடுதி திறப்பு

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டியில், பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறையின் சாா்பில் கட்டப்பட்டுள்ள சமூக நீதி பள்ளி மாணவா் விடுதி திறந்துவைக்கப்பட்டது. சென்... மேலும் பார்க்க

அரியலூரில் அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் அண்ணாசிலை அருகே தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.ஆா்ப்பாட்டத்தில், அங்கன்வாடி ஊழியா்கள், உதவி... மேலும் பார்க்க

அரியலூரில் அனைத்து மத்திய தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் அண்ணாசிலை அருகே அனைத்து மத்திய தொழிற் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு ஏஐடியுசி மாவட்டப் பொதுச் செயலா் டி.தண்டபாணி, தொ... மேலும் பார்க்க