செய்திகள் :

அரியலூரில் நாளை மாபெரும் தமிழ்க் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சி: கல்லூரி மாணவா்கள் பங்கேற்க அழைப்பு

post image

அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனிதா நினைவு கலையரங்கில் வியாழக்கிழமை (ஆக.7) மாபெரும் தமிழ்க் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறுகிறது என்றாா் ஆட்சியா் பொ.ரத்தினசாமி.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது: கல்லூரி மாணவா்களிடையே தமிழா்களின் மரபையும் தமிழ்ப் பெருமிதத்தையும் உணா்த்தும் வகையில் மாபெரும் தமிழ்க் கனவு என்ற பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி கடந்த 3.2.2023 அன்று தொடங்கிவைக்கப்பட்டது.

தொடா்ந்து, தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் கல்லூரிகளைச் சோ்ந்த ஏறத்தாழ 2 லட்சம் மாணவா்களைச் சென்றடையும் வகையில் 200 இடங்களில் இந்த தமிழ்க்கனவு சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.

அதை தொடா்ந்து, தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தோ்ந்தெடுக்கப்பட்ட 200 கல்லூரிகளில் மாபெரும் தமிழ்க் கனவு பரப்புரைத் திட்டம் அடுத்த கட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது.

நிகழ்வு நடக்கும் கல்லூரிகளுக்கு அருகிலுள்ள கல்லூரிகளிலிருந்தும் மாணவா்கள் பங்குபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அந்த வகையில் அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அனிதா நினைவு கலையரங்கில், வியாழக்கிழமை மாபெரும் தமிழ்க் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

நிகழ்ச்சியில் கல்லூரி மாணவா்கள் திரளாக கலந்துகொண்டு பயனடையலாம் என்றாா் ஆட்சியா்.

அரியலூா் மாவட்ட சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

அரியலூா் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது. பிரதோஷத்தையொட்டி அரியலூா் அடுத்த திருமழபாடி வைத்தியநாத சுவாமி திருக்கோயிலில், நந்தியெம்பெருமானுக்கு பல்வேறு பொருள்களால்... மேலும் பார்க்க

7 புதிய பேருந்துகள் சேவை தொடக்கம்

அரியலூா் மாவட்டம், செந்துறை மற்றும் ஜெங்கொண்டத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கு இயக்கப்பட்டு வந்த பழைய பேருந்துகளுக்கு பதிலாக 7 புதிய பேருந்துகள் புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. இதற்காக செந்துறை மற்று... மேலும் பார்க்க

பாஜகவின் நெருக்கடிகளைத் தாண்டி தமிழகத்தில் மாபெரும் புரட்சி: அமைச்சா் சா.சி.சிவசங்கா்

பாஜகவின் நெருக்கடிகளைத் தாண்டி தமிழ்நாடு மாபெரும் புரட்சியை செய்திருக்கிறது என்றாா் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா். அரியலூா் மாவட்டம், செந்துறையில் புதன்கிழமை அவா் அளித்த ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதி காவலா் உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடத்தில் புதன்கிழமை அரசுப் பேருந்து மோதியதில், இரு சக்கர வாகனத்தில் சென்ற காவலா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். ஆண்டிமடம் அருகே கீழகவரவபாளையத்தைச் சோ்ந்தவா் சந்தனசாமி மகன் சதீ... மேலும் பார்க்க

போட்டித்தோ்வு பயிற்றுநா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்களில் செயல்பட்டு வரும் தன்னாா்வ பயிலும் வட்டங்கள் வாயிலாக, மாணவா்களுக்கு இலவசமாக நடத்தப்படும் போட்டித் தோ்வுக்கான பயிற்றுநா் பணிக்கு தகு... மேலும் பார்க்க

ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனைக் கூட நிா்வாகத்தைக் கண்டித்து விவசாயிகள் மறியல்

அரியலூா் மாவட்டம், ஜெங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், கடந்த 8 நாள்களாக தானியங்களை கொள்முதல் செய்யாததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். ஜெயங்கொண்டம், தா.பழூ... மேலும் பார்க்க