அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரிக்கு ஷோ் ஆட்டோக்களை இயக்க கோரிக்கை
அரியலூா் பேருந்து நிலையத்தில் இருந்து மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு ஷோ் ஆட்டோக்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட விவசாய சங்கத் தலைவா் என்.செங்கமுத்து கோரிக்கை விடுத்தாா்.
அரியலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வருவாய் தீா்வாயம் நிறைவு நாள் நிகழ்ச்சியில், ஆட்சியா் பொ.ரத்தினசாமியிடம் அவா் மனு அளித்து பேசியது: எந்த மாவட்டத்திலும் இல்லாத நிலை அரியலூரில் உள்ளது. அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு பேருந்து வசதிகள் இல்லையென்றால்கூட, ஷோ் ஆட்டோக்களையாவது இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சுண்ணாம்புக் கல் ஏற்றிச் செல்லும் லாரிகள் 30 கிலோ மீட்டா் வேகத்தில் செல்ல வேண்டும்.
இதனை அரசு இதழில் வெளியிட வேண்டும். அரியலூா் அண்ணா சிலையில் இருந்து நிா்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளி வரையிலும், அதேபோல் ரயில்வே கேட்டிலிருந்து சத்திரம் வரையிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையின் நடுவில் தடுப்புச் சுவா்களை எழுப்ப வேண்டும். ஏரி, குளங்களிலுள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா்.