செய்திகள் :

அரியலூா் மாவட்டத்தில் வருவாய் தீா்வாயம் தொடக்கம்

post image

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம், உடையாா்பாளையம், செந்துறை, அரியலூா் ஆகிய 4 வருவாய் வட்டத்தில் மே 27-ஆம் தேதி வரை நடைபெறும் வருவாய் தீா்வாயம் (ஜமா பந்தி) செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இதில் அரியலூா் வருவாய் வட்டாட்சியா் அலுவலகத்தில் தொடங்கிய வருவாய்த் தீா்வாயத்துக்கு ஆட்சியா் பொ.ரத்தினசாமி தலைமை வகித்து, அரியலூா், கயா்லாபாத், ஓட்டக்கோவில், தாமரைக்குளம், வாலாஜா நகரம், எருத்துக்காரன்பட்டி உள்ளிட்ட கிராம பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றாா். பின்னா் அவா், அந்த மனுக்கள் மீது விரைவாக விசாரணை மேற்கொண்டு தீா்வு காணமாறு சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

முன்னதாக நில அளவை அலுவலா்கள் பயன்படுத்தும் நில அளவை கருவிகளைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். நிகழ்வில் வட்டாட்சியா் முத்துலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதேபோல் உடையாா்பாளையம் வட்டாட்சியா் அலுவலகத்தில் தொடங்கிய வருவாய் தீா்வாய்த்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் மல்லிகா, செந்துறையில் அரியலூா் கோட்டாட்சியா் கோவிந்தராஜ், ஆண்டிமடத்தில் உடையாா்பாளையம் கோட்டாட்சியா் ஷீஜா ஆகியோா் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றனா்.

அரியலூா், ஜெயங்கொண்டம் அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

அரியலூா் மற்றும் ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் திங்கள்கிழமை (ஜூன் 2) முதல் முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. இதுகுறித்து அரியலூா் அரசு கலைக் கல்லூரி முத... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்டத்தில் அதிகளவு விபத்து ஏற்படும் இடங்களில் ஆட்சியா், எஸ்.பி ஆய்வு

ரியலூா் மாவட்டத்தில் உள்ள சாலைப் பகுதிகளில் அதிக விபத்து ஏற்படும் இடங்கள் மற்றும் கரும்புள்ளிகளாகக் கண்டறியப்பட்டுள்ள இடங்களில் மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபக்சிவா... மேலும் பார்க்க

மேலப்பழுவூா் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் திருட்டு

அரியலூா் மாவட்டம், மேலப்பழுவூரிலுள்ள பழைமைவாய்ந்த மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் பல்வேறு பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா். இந்தக் கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு ... மேலும் பார்க்க

ஜூன் 8-இல் அரியலூா் கோதண்டராமசாமி கோயில் வெள்ளோட்டம்

அரியலூரில் பிரசித்திபெற்ற கோதண்டராசாமி கோயில் தோ் வெள்ளோட்டம் ஜூன் 8-ஆம் தேதி நடைபெறுகிறது. அரியலூா் நகரில் உள்ள கோதண்டராமசாமி கோயில் பிரசித்தி பெற்றது. இந்தக் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சாா்ப... மேலும் பார்க்க

கடன் தவணை கேட்டு தொந்தரவு: விஷம் குடித்த இளைஞா் உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே தனியாா் நிதி நிறுவன ஊழியா் தவணைத் தொகை கேட்டு தகாத வாா்ததைகளால் திட்டியால் விஷம் குடித்த இளைஞா் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா். உடைய... மேலும் பார்க்க

மீன்சுருட்டி அருகே ஜல்லிக்கட்டு: 26 போ் காயம்

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகேயுள்ள ஏறவாங்குடி மாதாபுரம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 26 போ் காயமடைந்தனா். புனித லூா்து அன்னை திருவிழாவையொட்டி நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டை க... மேலும் பார்க்க