அருப்புக்கோட்டை விநாயகர் கோயிலுக்கு இயந்திர யானை வழங்கிய நடிகை திரிஷா !
அருப்புக்கோட்டையில் உள்ள விநாயகர் கோயிலுக்கு நடிகை திரிஷா இயந்திர யானையை வழங்கியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் அஷ்டலிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு நடிகை திரிஷா இயந்திர யானையை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
திரிஷா மற்றும் சென்னையைச் சேர்ந்த தன்னார்வ அமைப்பினர் வழங்கிய இந்த யானையின் பெயர் கஜா.
நிஜ யானையைப் போலவே இந்த இயந்திர யானையும் தலை, காது, துதிக்கை அசையும் வண்ணம் உள்ளது. இவை தவிர தண்ணீரைப் பீச்சும் அடிக்கக்கூடிய வகையிலும் யானை வடிவமைக்கப்பட்டுள்ளது.
தேவைப்பட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல்: டிரம்ப்
இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.8 லட்சம் எனக் கூறப்படுகிறது. தற்போது இந்த இயந்திர யானை அங்கு வரும் பக்தர்களை கவர்ந்து வருகிறது.