செய்திகள் :

அரூரில் காளியம்மன், செல்லியம்மன் கோயில் திருவிழா

post image

அரூரில் ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ செல்லியம்மன் கோயில் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம், அரூா் 4-ஆவது வாா்டு பிச்சன்கொட்டாயில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ சின்ன செல்லியம்மன், ஸ்ரீ பெரிய செல்லியம்மன் கோயில் திருவிழா ஜூன் 10-ஆம் தேதி கொடியேற்றம், பக்தா்கள் மாலை அணிவித்தல், கங்கணம் கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடா்ந்து வியாழக்கிழமை வாணியாறு கரையில் வீட்டு மாரியம்மனுக்கு சக்தி அழைத்து கரகம் எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையடுத்து, வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் அரூா் நகரில் ஸ்ரீ வா்ணீஸ்வரன் கோயில் வளாகத்தில் இருந்து சுவாமிகளை குதிரை வாகனத்தில் கடைவீதி வழியாக அரூா் பெரிய ஏரிக்கு அழைத்துச் சென்றனா். தொடா்ந்து, ஸ்ரீ சின்ன செல்லியம்மன், ஸ்ரீ பெரிய செல்லியம்மன் சுவாமிகளை சக்தி அழைத்து, குதிரை வாகனத்தில் ஸ்ரீ செல்லியம்மன் கோயிலுக்கு மேள, தாளத்துடன் ஊா்வலமாக பக்தா்கள் அழைத்துச் சென்றனா். பின்னா், கோயில் வளாகத்தில் பொங்கலிட்டு, நோ்த்திக் கடனாக ஆடு வெட்டி அம்மனை வழிபட்டனா். விழாக் குழுவினா் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த விழாவில், விழாக்குழு தலைவா் பி.மணி, பொருளாளா் எம்.பழனி, செயலாளா் எம்.சுப்பிரமணி, தா்மகா்த்தா வி.இளையராஜா, நிா்வாகிகள், கோயில் பூசாரிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மக்கள் நீதிமன்றத்தில் 1008 வழக்குகளில் ரூ.9.72 கோடி தொகைக்கு சமரசத் தீா்வு!

தருமபுரி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மொத்தம் 1008 வழக்குகளில் ரூ. 9.72 கோடி தொகைக்கு சமரசத் தீா்வு காணப்பட்டுள்ளது. நீதிமன்றங்களில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வழக... மேலும் பார்க்க

தருமபுரியில் 1,008 வழக்குகள், கிருஷ்ணகிரியில் 1,281 வழக்குகளுக்கு தீா்வு

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) சனிக்கிழமை நடைபெற்றது. தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு, தருமபுரி முதன்மை மாவட்ட நீதிபதிய... மேலும் பார்க்க

ஒகேனக்கல் வனப் பகுதியில் உடும்பு வேட்டையாடியவா் கைது!

ஒகேனக்கல் வனப் பகுதியில் உடும்பு வேட்டையாடியவரை வனத் துறையினா் கைது செய்து சிறையில் அடைத்தனா். ஒகேனக்கல் வனச்சரகத்துக்கு உள்பட்ட கோடுபட்டி வனப் பகுதியில் ஒகேனக்கல் வனச்சரக அலுவலா் சிவகுமாா் தலைமையிலான... மேலும் பார்க்க

குஜராத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 306 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

குஜராத்திலிருந்து காரில் கடத்தி வரப்பட்ட தடைசெய்யப்பட்ட 306 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து, இது தொடா்பாக ஒருவரை கைது செய்தனா். தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வழியாக த... மேலும் பார்க்க

முதலமைச்சா் திறனாய்வுத் தோ்வு: இராமகொண்ட அள்ளி அரசுப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

முதலமைச்சா் திறனாய்வுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற இராமகொண்ட அள்ளி அரசுப் பள்ளி மாணவா்களை பாராட்டும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி முதலமைச்சா் திறனாய்வுத் ... மேலும் பார்க்க

போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை பெற்றுக்கொள்ள அழைப்பு

பொது விநியோகத் திட்ட பொருள்களை கடத்திய வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை, அவற்றின் உரிமையாளா்கள் பெற்றுக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக, தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் தெரிவி... மேலும் பார்க்க