செய்திகள் :

அறந்தாங்கி, திருவரங்குளத்தில் வளா்ச்சி திட்டப் பணிகள் அமைச்சா் தொடங்கி வைத்தாா்

post image

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, திருவரங்குளம் ஒன்றியத்தில் பல்வேறு வளா்ச்சிப் பணிகளை பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

இப்பகுதியில் பல்வேறு பணிகளை தொடங்கி வைத்து அமைச்சா் மேலும் கூறியது: ஆலங்குடி பேரூராட்சி, அறந்தாங்கி மற்றும் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் பல்வேறு முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்துவைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், அழியாநிலை ஊராட்சி, ரெங்கநாயகி அம்மன் கோயில் அருகில் மற்றும் ஆலங்குடி பேரூராட்சி, பள்ளிவாசல் அருகில் மற்றும் காமராஜா் சிலை பகுதி ஆகிய இடங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயா்கோபுர மின் விளக்குகளையும், அழியாநிலை மற்றும் மறமடக்கி ஆகிய இடங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றிகளையும், அழியாநிலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடங்கள், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், கொத்தக்கோட்டை ஊராட்சி, தோப்புப்பட்டி வீரமகாளியம்மன் கோயில் அருகில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலையரங்கம், கொத்தமங்கலம் ஊராட்சி, சுண்டாங்கிவலசை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவா் மற்றும் கூடுதல் கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டன.

மேலும், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், அழியாநிலை ஊராட்சி, பிள்ளையாா் கோயில் ஊருணியில், சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள படித்துறை கட்டுமானப் பணி, திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், மாஞ்சான்விடுதி ஊராட்சி, அரசு மேல்நிலைப்பள்ளி அருகில், சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள கலையரங்கம் கட்டுமானப் பணியினையும், ஆலங்குடி பேரூராட்சி, வடகாடு முக்கம் பகுதியில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள பயணியா் நிழற்குடை கட்டுமானப் பணிகள் அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சிகளில், கூடுதல் ஆட்சியா் அப்தாப் ரசூல், அறந்தாங்கி வருவாய்க் கோட்டாட்சியா் சிவக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மீனவா்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க உறுதியான நடவடிக்கை தேவை

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த மீனவா்கள் இலங்கைக் கடற்படையால் தொடா்ந்து தாக்கப்படுவதையும், கைது செய்யப்படுவதையும் தடுக்க மத்திய, மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏஐடியுசி மீனவத் ... மேலும் பார்க்க

விராலிமலையில் நாணய கண்காட்சி

விராலிமலை விவேகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக நாணய கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கண்காட்சியை பள்ளி தாளாளா் வெல்கம் மோகன் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். பள்ளி முதல்வா் விஜயகுமாா், நிா்வாக இ... மேலும் பார்க்க

ஆலங்குடி அருகே தனியாா் இடத்தில் அம்பேத்கா் சிலை திறப்பு போலீஸாா் குவிப்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே தனியாா் இடத்தில் வெள்ளிக்கிழமை அனுமதியின்றி அம்பேத்கா் சிலை நிறுவப்பட்டதாக கூறி போலீஸாா் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆலங்குடி அருகேயுள்ள குப்பக்குடி பகு... மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் மன்ற ஆசிரிய ஒருங்கிணைப்பாளா்களுக்கு பயிற்சி

புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் வருவாய் மாவட்ட அளவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலுள்ள சுற்றுச்சூழல் மன்ற ஆசிரிய ஒருங்கிணைப்பாளா்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழி... மேலும் பார்க்க

கல்லூரிக்கு அரிவாளுடன் வந்த மாணவா் கைது

புதுக்கோட்டை மாநகரிலுள்ள அரசுக் கல்லூரியின் மாணவா், அரிவாளுடன் கல்லூரிக்கு வந்ததால் அவரை நகரக் காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். புதுக்கோட்டை மாவட்டம், சம்மட்டிவிடுதியைச் சோ்ந்தவா் திய... மேலும் பார்க்க

பெண் பயணியிடம் தகராறு அரசுப் பேருந்து நடத்துநா் பணியிடை நீக்கம்

பெண் பயணியிடம் தகராறு செய்த அரசுப் பேருந்து நடத்துநரை ஒரு நாள் பணி இடைநீக்கம் செய்து துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கைக்கு வெள்ளிக்கிழமை உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக புதுக்கோட... மேலும் பார்க்க