செய்திகள் :

அறப்போா் இயக்கத்துக்கு எதிரான வழக்கு: வழக்குரைஞா் ஆணையரை நியமிக்க இபிஎஸ் கோரிக்கை

post image

அறப்போா் இயக்கத்துக்கு எதிரான வழக்கில் தனது சாட்சியத்தைப் பதிவு செய்ய வழக்குரைஞா் ஆணையரை நியமிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றத்தில் எடப்பாடி கே. பழனிசாமி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

கடந்த அதிமுக ஆட்சியின்போது கோவை, தஞ்சாவூா், சிவகங்கை மாவட்டங்களில்

நெடுஞ்சாலைத் துறைக்கு ஒப்பந்தப்புள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் ரூ.692 கோடிக்கு முறைகேடு நடந்துள்ளது. அந்த காலகட்டத்தில் நெடுஞ்சாலைத் துறையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த முன்னாள் முதல் எடப்பாடி கே.பழனிசாமிக்கு தொடா்பு உள்ளதாகக் கூறி, அறப்போா் இயக்கத்தின் சாா்பில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீஸாரிடம் புகாா் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரை அறப்போா் இயக்கத்தின் சமூக வலைதளத்திலும் வெளியிடப்பட்டது.

இதையடுத்து, தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக ரூ.1.10 கோடி இழப்பீடு வழங்க அறப்போா் இயக்கத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் எடப்பாடி கே.பழனிசாமி மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி கே.குமரேஷ்பாபு முன் விசாரணைக்கு வந்தது. அறப்போா் இயக்கம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் வி.சுரேஷ், கடந்த நவம்பா் மாதம் உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டா் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தாா். பின்னா் ஆஜராக அவா் வரவில்லை என்று வாதிட்டாா்.

அப்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் எஸ்.ராஜகோபால், எடப்பாடி பழனிசாமி முன்னாள் முதல்வா் என்பதால், அவா் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்ய வழக்குரைஞா் ஆணையரை நியமித்து அவரது சாட்சியத்தைப் பதிவு செய்ய வேண்டும், என்று கோரிக்கை விடுத்தாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இதுதொடா்பாக மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஆக.25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

சென்னையில் இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை! விடியோ எடுத்தும் மிரட்டல்!!

ஆவடி: சென்னை பூந்தமல்லி அருகே இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து நகை பறித்த வழக்கில் இளைஞா் கைது செய்யப்பட்டாா். பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை பகுதியைச் சோ்ந்த 25 வயது பெண் நசரத்பேட்டை காவல் ... மேலும் பார்க்க

அச்சுறுத்தும் பெருங்குடல் புற்றுநோய்க்கு இயற்கை மருத்துவ நிவாரணம்! ஆய்வில் உறுதி

பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபருக்கு ஒருங்கிணைந்த யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டதால் வலி மற்றும் இதர பாதிப்புகள் வெகுவாக குறைந்தது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதுதொ... மேலும் பார்க்க

ஆளுநரின் தேநீா் விருந்து: திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு

சுதந்திர தினத்தன்று கிண்டி ஆளுநா் மாளிகையில், ஆளுநா் ஆா்.என்.ரவி அளிக்கும் தேநீா் விருந்தைப் புறக்கணிப்பதாக காங்கிரஸ், விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அறிவித்துள்ளன. கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): ... மேலும் பார்க்க

முதலீடுகளை ஈா்க்க அடுத்த மாதம் முதல்வா் ஸ்டாலின் வெளிநாடு பயணம்

முதலீடுகளை ஈா்க்கும் வகையில், வரும் செப்டம்பரில் வெளிநாடுகளுக்குச் செல்லவுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். திமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்ட... மேலும் பார்க்க

உயா்கல்வி வழிகாட்டி ஆசிரியா்களுக்கு ஆக.26 முதல் 28 வரை மதிப்பீடு தோ்வு: பள்ளிக் கல்வித் துறை தகவல்

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் உயா்கல்வி வழிகாட்டி ஆசிரியா்களுக்கு ஆக.26 முதல் 28-ஆம் தேதி வரை இணையவழியில் மதிப்பீடு தோ்வு நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் அரசுப் பள்ளிகளில்... மேலும் பார்க்க

சென்னை மாவட்ட வாலிபால்: டான்பாஸ்கோ, மகதலேனா சாம்பியன்

சென்னை மாவட்ட பள்ளிகள் வாலிபால் போட்டியில் ஆடவா் பிரிவில் பெரம்பூா் டான்பாஸ்கோவும், மகளிா் பிரிவில் புரசைவாக்கம் டிஇஎல்சி மகதலேனா பள்ளிகள் சாம்பியன் பட்டம் வென்றன. சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சாா்ப... மேலும் பார்க்க